புதிதாக நியமனம்பெற்ற ஜப்பான் நாட்டு பாதுகாப்பு ஆலோசகர் விமானப்படைத் தளபதியுடன் சந்திப்பு
8:38am on Friday 5th August 2016
 புதிதாக நியமனம்பெற்ற இலங்கைக்கான ஜப்பான் நாட்டு பாதுகாப்பு ஆலோசகர் லெப்டினன்ட் அட்சுஹிரோ மொரோரே விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் ககன் புலத்சிங்கள அவர்களை 2016 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 04 ஆம் திகதி விமானப்படைத் தலைமையகத்தில்  வைத்து சந்தித்தார். விமானப்படைத் தளபதியுடனான இச்சந்திப்பானது பாதுகாப்பு ஆலோசகரின் முதல் உத்தியோகபூர்வ சந்திப்பாகும்.

இச்சந்திப்பின் போது  விமானப்படைத் தளபதி  புதிதாக நியமனம்பெற்ற பாதுகாப்பு ஆலோசகருக்கு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்ட பின் நடந்த  சினேக பூர்வமான கலந்துரையாடலின் போது இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் குறித்தும் ஆராயப்பட்டன.

இந்நிகழ்வை நினைவு கூறும் வகையில் இருவருக்குமிடையில் நினைவுச் சின்னங்களும் பரிமாறி கொள்ளப்பட்டன.

 
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை