ஹிங்குரகோட விமானப்படை தளத்தின் புதிய கட்டளை அதிகாரி நியமனம்.
3:43pm on Tuesday 10th September 2019
ஹிங்குரகோட  விமானப்படை தளத்தின் கட்டளை புதிய  அதிகாரியாக குரூப் கேப்டன் டயஸ்   அவரகள் கடந்த 2019 ஆகஸ்ட் 19 ம் திகதி  உத்தியோகபூர்வமாக கடமைகளை பொறுப்பேற்றார்  முன்னாள் கட்டளை அதிகாரி எயார் கொமாண்டர் எதிரிசிங்க   அவர்களினால் பொறுப்புக்கள்  அணிவகுப்பு முறை மூலம் கையளிக்கப்பட்டது.

இந்த அணிவகுப்புக்கு விங் கமாண்டர் லியனாராச்சி   அவர்கள் தலைமை தாங்கினார்.

முன்னாள் கட்டளை அதிகாரி எதிரிசிங்க அவர்கள் 2017ம் ஆண்டு ஜனவரி 03ம் திகதி ஹிங்குரகோட  கட்டளை அதிகாரியாக கடமைகளை  பொறுப்பேற்றார் சீன பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் பயிற்சிநெறிக்கு செல்ல இருப்பதால் இந்த பொறுப்புக்களை புதிய கட்டளை அதிகாரியிடம்  பொறுப்புக்களை கையயளித்தார் .

புதிய கட்டளை அதிகாரியான குரூப் கேப்டன் டயஸ்  அசபுகஸ்தண்ணா பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர் பள்ளியின் விமானப் பிரிவின் தலைவராக பணியாற்றினார் . அவர் மேலும் அவர் எம்ஐ 17,எம்ஐ 24 பெல் 206, ஜெட் ரேஞ்சர்பெல் 212,பெல் 412 ஹெலிகாப்டர்ஆகிய விமானங்களில் கைதேர்ச்சி பெற்ற விமானி ஆவர்.

அணிவகுப்பு முடிவின் பின்பு எயார் கொமாண்டர் எதிரிசிங்க   அவர்களினால் உரை நிகழ்த்தப்பட்டது இதன்போது  அனைவருக்கும் சிறந்த பங்களிப்பை வழங்கியதற்கு  நன்றி தெரிவிக்கப்பட்டது.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை