இலங்கை விமானப்படையின் 2020ம் ஆண்டுக்கான சைக்கிள் ஓட்டப்போட்டிகள் பற்றிய ஊடகவிலாளர் கருத்தரங்கு.
2:54pm on Thursday 5th March 2020
இலங்கை விமானப்படையின் 69 வது  ஆண்டு நிறைவையொட்டியும்  21 வது விமானப்படை  சைக்கிள் ஓட்டப்போட்டி பற்றியும்  ஊடகவியலாளர்  கருத்தரங்கு ஓன்று கடந்த 2020 பெப்ரவரி 26 ம் திகதி  விமானப்படை  கருத்தரங்கு மண்டபத்தில் இடம்பெற்றது.

2020 ம் ஆண்டு மார்ச் மாதம் 2 ஆம் திகதி இலங்கை விமானப்படை அதன் 69 ஆவது ஆண்டு விழாவை கொண்டாடுகிறது.இந்த நிகழ்வு விமானப்படை  வரலாற்றில்  முக்கியான ஒரு தினமாகும் என்பது குறிப்பிடத்தக்கது இதற்கான  வேலைகள்  மார்ச் 01ம் திகதி  முதல் ஆரம்பிக்கப்பட்டது  என்பது விசேட அம்சமாகும்.

இதன் முதலாவது  நிகழ்வாக  மல்லிகை மலர் பூஜை நிகழ்வு  களனி ரஜமஹா  விகாரையில் மார்ச் 01 ம்  திகதி     விமானப்படை தளபதி மற்றும்  அதிகாரிகள்  படைவீரர்கள் சிவில் ஊழியர்கள் பங்கேற்பில் இடம்பெற்றது.

மார்ச் 02  ம் திகதி அன்று  விமானப்படையின்  69 வது வருட பூர்த்தி  தினத்தில் விமானப்படை  தலைமை காரியாலயத்தில்  விமானப்படை  தளபதி அவர்களினால்  உரை நிகழ்த்தப்பட்டு அனைத்து விமானப்படை நிலையங்களுக்கும்  நேரடியாக  ஒளிபரப்பு செயப்படடும் .

விமானப்படையின் 69வது  வருடன நினைவை முன்னிட்டு  மேலும் 21 வது  விமானப்படை சைக்கிள் ஓட்ட போட்டியும்    இடம்பெற  உள்ளது இந்த  நிகழ்வில்  100 ஆண்களும் 30 பெண் போட்டியாளர்களும்   பங்குபெறவுள்ளனர்.

இலங்கை விமானப்படை  மற்றும் இலங்கை சைக்கிள் ஓட்ட சங்கம் இணைந்து இந்த போட்டிகளை நடத்துகின்றது  இது   சைக்கிள் போட்டிகளின் விதிமுறைப்படி இந்த போட்டிகள் இடம்பெறும்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை