இலங்கை விமானப்படையின் 69 வது வருட ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு மல்லிகை மலர் பூஜை நிகழ்வு.
9:34pm on Thursday 26th March 2020
இலங்கை   விமானப்படையின்  69 வது  வருட ஆண்டு  பூர்த்தியை முன்னிட்டு மல்லிகை மலர் பூஜை நிகழ்வு  கடந்த 2020 மார்ச் 01 ம் திகதி   களனி  ராஜமஹா  விகாரையில்  இடம்பெற்றது   இதன் போது  இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுமங்கள டயஸ் மற்றும்  சேவா வனிதா பிரிவின  தலைவி  திருமதி மயூரி பிரபாவி டயஸ்  அவர்களும் கலந்துகொண்டனர்  இதன்போது  தாய் நாட்டிற்காக  உயிர்நீத்த  விமானப்படை  வீரர்களுக்காக    விசேட பூஜைகளும்  இடம்பெற்றது .


இந்த நிகழ்வில்  விமானப்படை தலைமை தளபதி எயார் வைஸ் மார்ஷல் சுதர்ஷன பதிரன மற்றும் பணிப்பளர்கள் , அதிகாரிகள் படைவீரர்கள்  மற்றும் விமானப்படை  அங்கத்தவர்களின்  குடும்ப உறுப்பினர்கள்   கலந்துகொண்டனர்.


airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை