முல்லைத்தீவு விமானப்படை தனிமைப்படுத்தல் மைய்யத்தில் தனிமைப்படுத்தப்பட்ட 203 பேர் வீடுதிரும்பினர்.
3:50pm on Monday 11th May 2020
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு  வெளிநாட்டில் இருந்து வருகை தந்த  203 பயணிகளை  தனிமைப்படுத்தும்  முகமாக முல்லைத்தீவு  விமானப்படை தனிமைப்படுத்தல் மைய்யத்திற்கு கடந்த 2020 மார்ச் 22 ம் திகதி அழைத்துவரப்பட்டனர்.

இந்த தனிமைப்படுத்தல் மைய்யங்கள்  விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுமங்கள டயஸ் அவரக்ளின் ஆலோசனை மற்றும்  நேரடி மேட்ர்பார்வையின் கீழ்  நிர்மாணிக்கப்பட்டது.

முல்லைத்தீவு  தனிமைப்படுத்தல் மைய்யத்தினுள் 56 ஆண்கள் 147 பெண்கள்  ஆகியோர் உள்ளடங்குகின்றனர்.

முல்லைத்தீவு  விமானப்படை கட்டளை அதிகாரி குருப் கேப்டன் அனிருத்த விஜேசிறிவர்தன  அவர்களின்  மேட்ர்பார்வையின் கீழ் 14 நாட்கள்  வெற்றிகரமாக இந்த தனிமைப்படுத்தல் பரிசோதனையின் பின்பு  கடந்த 2020 ஏப்ரல் 06  ம் திகதி  தங்களது வீடுகளுக்கு  போக்குவரத்து வசதியுடன் அனுப்பி வைக்கப்பட்டனர்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை