இலங்கை விமானப்படை துணை தலைமை தளபதி எயார் வைஸ் மார்ஷல் ஷாஹர கொட்டகதெனிய அவர்கள் விமானப்படை சேவையின் இருந்து ஓய்வு பெற்றார்.
8:02pm on Wednesday 15th July 2020
இலங்கை  விமானப்படை பிரதி  துணை  தளபதியான  எயார்  மார்ஷல்  ஷாஹர கொட்டகதெனிய அவர்கள்  32 வருட  விமானப்படை  சேவையில் இருந்து கடந்த 2020 ஜூன் 27  ம் திகதி  ஓய்வு பெற்றார்.

விமானப்படை  தளபதி எயார் மார்ஷல்  சுமங்கள டயஸ்  அவர்களின்  ஆலோசனைப்படி  எயார்  வைஸ்  மார்ஷல்  கொட்டகதெனிய அவர்களுக்கு உத்தியோக பூர்வ பிரியாவிடை நிகழ்வு இடம்பெற்றது.    இதன்போது  உரை நிகழ்திய  விமானப்படை  தளபதி  அவர்கள்  எயார்  வைஸ்  மார்ஷல்  கொட்டகதெனிய அவர்களுக்கு  தேசத்துக்கும் குறிப்பாக இலங்கை விமானப்படைக்கும் அர்ப்பணிப்பு மற்றும் சேவை செய்தமைக்கு நன்றி தெரிவித்தார்.

இதனை   நினைவுகூறும்  வைகையில்  விமானப்படை  தளபதியினால்  நினைவுச்சின்னம் வழங்கிவைக்கப்பட்டது அதனை தொடர்ந்து  துணைத்தலைமை  தளபதி அவர்களுக்கு  இராணுவ மரியாதையும்  வர்ண  அணிவகுப்பு  படைப்பிரிவால் அளிக்கப்பட்டது.

1985  ஜூலை 3ம் திகதி , அன்று இலங்கை விமானப்படையில் கேடட் அதிகாரியாக சேர்ந்தார் மற்றும் பைலட் பொது செயல்பாட்டு கிளையில் பைலட் அதிகாரியாக 1987 ஜனவரி 1ம் திகதி  அன்று பொறுப்பேற்று தனது சேவையை ஆரம்பித்தார்  .  எயார்  வைஸ் மார்ஷல் கொட்டகதெனிய அவர்கள்  பெய்ஜிங்கின் மதிப்புமிக்க மக்கள் விடுதலை இராணுவத்தின் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார் மேலும் இந்தியாவின் சென்னை  பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு மற்றும் மூலோபாய மேலாண்மை ஆய்வுகளில் முதுகலை பட்டம் பெற்றார் . தனது தொழில் வாழ்க்கையில்,எயார்  வைஸ் மார்ஷல்  கொட்டகதெனிய அவர்கள் உள்ளூர் மற்றும் சர்வதேச அளவில் பல்வேறு தொழில் பயிற்சி வகுப்புகளில் பங்கேற்றுள்ளார்.  

மேலதிக  தகவல்களை  ஆங்கில  மொழிபெயர்ப்பில்  பார்க்கவும்.



airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை