விமானப்படை மோட்டார் சைக்கிள் பந்தய அணியினரால் விமானப்படை சேவா வனிதா பிரிவுக்கு 5.2மில்லியன் ரூபாய் நன்கொடையாக வழங்கப்பட்டது.
2:39pm on Thursday 6th August 2020
விமானப்படை  மோட்டார்  பந்தய  குழுவினரால் விமானப்படை சேவா  வனிதா  பிரிவுக்கு 5.2 மில்லியன் ரூபாய்  நன்கொடையாக  கடந்த 2020 ஜூலை 08 ம் திகதி  வழங்கப்பட்டது.

சேவா  வனிதா பிரிவின்  தலைவி  திருமதி மயூரி பிரபாவி  டயஸ் அவர்களிடம்  மோட்டார் பந்தய குழு சார்பாக கடந்த  2019 ம் ஆண்டுஇடம் பெற்ற  றோதஹம்   மோட்டார் பந்தயப்போட்டிகளில் வெற்றி ஈட்டிய தொகையினையே அதன் தலைவர்   எயார் கொமடோர் ஹேமந்த சொயிஸா அவர்களினால்  கையளிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில்   மோட்டரை பந்தய குழு செயலாளர்  விங் கமாண்டர்  மலிங்க சில்வா மற்றும் சேவா வனிதா பிரிவின் செயலாளர்  விங் கமாண்டர்  காயத்திரி ஏக்கநாயக்க ஆகியோர் கலந்துகொண்டனர்  .



airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை