64 வது கனிஷ்ட கட்டளை மற்றும் பணியாளர்கள் பாடநெறியின் பட்டமளிப்புவிழா.
2:49pm on Thursday 6th August 2020
சீனவராய விமானப்படை தளத்தில் இடம்பெற்ற  64 வது கனிஷ்ட  கட்டளை மற்றும் பணியாளர்கள் பாடநெறியின்  நிறைவின் பட்டமளிப்பு விழா2020 ஜூலை 16 ம் திகதி  ஜே சீ & எஸ் சீ   மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் விமானப்படை  நிர்வாக  பணிப்பளார் எயார் வைஸ் மார்ஷல் பியன்வில  அவர்கள் பிரதான அதிதியாக கலந்துகொண்டார் இந்த பாடநெறியானது  10 வாரம்கள் இடம்பெற்றது  இந்த பாடநெறியில் 27 அதிகாரிகள் கலந்துகொண்டார் இலங்கை விமானப்படையை  சேர்ந்த  ஸ்கொற்றன்  லீடர் மற்றும்  பிளைட் லேப்ட்டினால்  நிலை அதிகாரிகள்   கலந்துகொண்டனர்.

இந்த பாடநெறியானது  மின்கற்றல் நேரலை மூலம் இடம்பெற்ற முதலாவது பாடநெறியொயாகும் என்பது குறிப்பிட தக்கது.

இந்த பாடநெறியானது  கடந்த 2020 ஏப்ரல் 01ம் திகதி  தொடங்க இருந்தது  மேலும் நாட்டில்  கோவிட்  19  தொற்றின் காரணமாக நாடு முடக்கப்பட்டதுடன்  இந்த அப்பாடநெறி தாமதமாகவே ஆரம்பிக்கப்பட்டது அதனபின்பு விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுமங்கள டயஸ் அவர்களின்  ஆலோசனைப்படி  நேரடியாக பாடநெறிகள்  இணையம்மூலம்  ஆரம்பிக்கப்பட்டது  இந்த முயற்சியில்   சீனவராய  படைத்தள கட்டளை அதிகாரி எயார் கொமடோர் ராஜபக்ஷ மற்றும்  கனிஷ்ட கட்டளை மற்றும் பணியாளர்கள் பயிற்சி பாடசாலை  கட்டளை அதிகாரி குருப்  கேப்டன் செனவிரத்ன மற்றும் தகவல் தொழில்நுட்ப பணிப்பளார் ஆகியோரின் முயற்சியில்  இந்த பாடநேரி  ஆரம்பிக்கப்பட்டது .

06 வார கால கற்றலுக்கு பிறகு அனைத்து அதிகாரிகளும்  படைத்தளத்திற்கு வருகை தனது  தங்களது பயிற்சிகளில்  இணைந்துகொண்டனர்கனிஷ்ட  கட்டளை மற்றும் பணியாளர்கள் பாடநெறிக்கு களனி பல்கலைக்கழகம்  அனுமதி வழங்கியதுடன் பாதுகாப்பு நிர்வாகத்தில் முதுகலை டிப்ளோமாபட்டமும் வழங்கப்பட்டது.

இந்த பாடநெறியில்  சிறந்த மாணவர்களாக தெரிவு செய்யப்பட்டவர்கள் அவரக்ளின் பெயர் விபரங்களை  ஆங்கில மொழி  பெயர்ப்பில் பார்க்கலாம்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை