இலங்கை விமானப்படை சேவா வனிதா பிரிவினால் புதிய வீடுகள் கையளிப்பு.
10:19am on Wednesday 30th December 2020
விமானப்படை சேவா வனிதா பிரிவினால் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வீடுகள்  பதுளை , நாகியதெனிய ( ( காலி ) மற்றும் அக்குரஸ்ஸ ஆகிய பகுதிகளில் கடந்த 2020  அக்டோபர் 29 ம் திகதி  கையளிக்கப்பட்டது.

பதுளை பகுதியில் நிராமணிக்கப்பட்ட வீடானது விமானப்படையில் இருந்து அங்கவீனமுற்ற சிரேஷ்ட படைவீரர் சம்பத் குமார அவர்களுக்கு தியத்தலாவ விமானப்படைத்தள  இல 30 ம் ரெஜிமண்ட் படைப்பிரிவின் கட்டளை அதிகாரி விங் கமாண்டர் மேனுவர அவரக்ளின் மேற்பட்டவையின்கீழ் நிர்மாணிக்கப்பட்டு கையளிக்கப்பட்டது

காலி நாகியதெனிய பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட வீடுகள் சார்ஜெண் பத்மகுமார மற்றும் சார்ஜெண்ட் விஜேசேகர ஆகியோருக்கு  கொக்கல விமானப்படை கட்டளை அதிகாரி குருப் கேப்டன் மனோஜ் கெப்படிபோல அவர்களின் வழிகாட்டலின்கீழ் நிர்மாணிக்கப்பட்டு வழங்கிவைக்கப்பட்டது .

இந்த வீட்டுத்திட்டத்திற்கான நிதி விமானப்படை சேவா வனிதா பிரிவினால் வழங்கப்பட்டதுடன்  விமானப்படை சிவில் பொறியியல் பிரிவின்  பணிப்பிலாளரின் மேற்பார்வையின்கீழ் தியத்தலாவ , கொக்கல  விமானப்படை தளத்தின் பணியாளர்களினால்   நிர்மாணிக்கப்பட்டது

House Donation at Badulla - Leading Air Craftsman Sampath Kumara HMP

House Donation at Akuressa  - Sargent Wijesekara

House Donation at Galle - Sargent Padmakumara
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை