இலங்கை விமானப்படை சேவா வனிதா பிரிவினால் பரிசுப்பொதிகள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது
12:28pm on Tuesday 4th May 2021
இலங்கை விமானப்படை  தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன  மற்றும்  சேவா வனிதா பிரிவின்  தலைவி திருமதி சார்மினி பத்திரன  ஆகியோரின் வழிகாட்டலின்கீழ்  நாட்டிற்காக  உயிர் நீத்த  விமானப்படை  வீரர்களின்  பிள்ளைகளுக்கு  பரிசுப்பொதிகள்  அன்பளிப்பாக வழக்கும் வைபவம் கடந்த 2020 டிசம்பர்  23 ம் திகதி  விமானப்படை தலைமை காரியாலயத்தில்  இடம்பெற்றது.

இந்த  ஏற்பாடுகளை  சேவா வனிதா பிரிவின் தலைவி அவர்கள்  மேற்கொண்டு இருந்தார்  மேலும்  நாட்டில் அமைந்துள்ள அணைத்து படைத்தளங்களுக்கு அப்பகுதிகளில்   வசிக்கும்  விமானப்படை  போர்வீரர்கள்  குடும்பத்தினருக்கு  வழங்க  பரிசுப்பொதிகள் அனுப்பிவைக்கப்பட்டன . இந்த திட்டத்தின் நோக்கம்  இந்த நாட்டிற்க்காக உயிர்த்தியாகம் செய்த  விமானப்படைவீரர்களின் குடும்பத்தினருடன் நெருக்கத்தையும் அவர்களோடு தொடர்ந்து பயணிப்பதும் ஆகும்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை