இலங்கை விமானப்படை மற்றும் இலங்கை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இணைந்து சட்டவிரோத மணல் அகழ்வு எதிரான நடவடிக்கைகள்
5:03pm on Sunday 12th December 2021
அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் அறிவுறுத்தலின் பெயரில் இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன அவர்களின் வழிகாட்டலின் கீழ் இலங்கை விமானப்படையின் விசேட படைப்பிரிவு மற்றும் இலங்கை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் ஆகியோர் விரைவாக செயல்பட்டு புலனாய்வுப் பிரிவினரின் தகவல்களுக்கு அமைய கடந்த 2021 மே 18ஆம் திகதி மூதூரில் உள்ள சித்தார் பாலத்தின் அருகில் மேற்கொள்ளப்பட்ட சட்டவிரோதமணல் நடவடிக்கைகளுக்கு எதிரான  நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

 இலங்கை விமானப்படையின் புலனாய்வு படைப்பிரிவின் மூலம் கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில் இலக்கம் 3 கடல்சார் படைப்பிரிவின் மூலம் பெல் 200 ஹெலிகாப்டர் மூலம்  இடம்பெற்ற வான் கண்காணிப்பின் தகவல்களின் அடிப்படையில் இலங்கை விமானப்படையினர் மற்றும் இலங்கை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இந்த செயற்பாடுகளுக்கு எதிராக நடவடிக்கைகளை மேற்கொண்டனர்

 இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான எம் ஐ -17 ரக ஹெலிகாப்டர்கள் மூலம் இந்த சட்ட விரோத நடவடிக்கைகளுக்கு எதிரான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன இதன்போது 56 சட்டவிரோத மணல் அகற்றல் தொழிலாளர்களும் 8 டிப்பர் வாகானமும் 13 உழவு இயந்திரங்கள் 34 படங்கள் மற்றும் 37 மோட்டார் சைக்கிளும் கைப்பற்றப்பட்டன இதன்போது கைப்பற்றப்பட்டு காரணங்கள் பொருட்கள் என்பன  போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

சுற்றுச்சூழலுக்கு எதிரான மற்றும் போதைப்பொருள் கடத்தல் மற்றும் சட்ட விரோத நடவடிக்கைகள் தொடர்பான சம்பவங்களை விரைவாக  தடுப்பதற்கு இந்தப் பிரிவானது 24 மணி நேரமும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை