வருடாந்த விமானப்படை கத்தோலிக்க மத நிகழ்வுகள்
5:49am on Thursday 25th July 2013
இலங்கை விமானப்படையின் வருடாந்த கத்தோலிக்க மத நிகழ்வுகள் இன்று அதாவது 23.07.2013 ஆம் திகதியன்று இலங்கை விமானப்படைத்தளபதி "எயார் மார்ஷல்" கர்ஷ அபேவிக்ரம அவர்களின் தலைமையில் கொழும்பு- 05 திம்பிரிகஸ்யாய புனித திரேஷா ஆலயத்தில் இடம்பெறவுள்ளது.

மேலும் இங்கு தாய்நாட்டுக்காக உயிர்நீத்த இராணுவ வீரர்கள், அவர்களது குடும்பத்தினர்கள்,நாட்டின் தலைவர்கள் ,முப்படைத்தளபதிகள் உட்பட அனைத்து விமானப்படை முகாம்களில் சேவை புரிபவர்களுக்காகவும் விஷேட பிராத்தனைகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

 அத்தோடு இங்கு இலங்கை விமானப்படையின், நிர்வாக சபை அதிகாரிகள் உட்பட அனைத்து விமானப்படை முகாம்களையும் பிரதினிதித்துவப்படுத்தும் வகையில் அதில் சேவை புரிபவர்களும் கலந்துகொள்ளவுள்ளனர்.

 
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை