விமானப்படையின் வருடாந்த இந்து மத நிகழ்வுகள் கடந்த 17.07.2013ம்
திகதியன்று கொழும்பு - 10 கெப்டன் கார்ட்னில் அமைந்துள்ள ஸ்ரி கைலாசனாதர்
சுவாமி சிவன் கோயிலில் விமானப்படைத்தளபதி " எயார் மார்ஷல்" ஹர்ஷ அபேவிக்ரம
தலைமையில் இடம்பெற்றது.
மேலும் இந்நிகழ்வில் இந்து
மதகுருமார்களினால் கடந்த மனிதாபிமான நடவடிக்கைகளின் போது உயிரிழந்த மற்றும்
அங்கவீனமுற்ற விமானப்படை வீரர்கள் நினைவுப்படுத்தப்பட்டதுடன் , விமானப்படை
அங்கத்தவர்கள் ,அவர்களது குடும்பங்கள் , முப்படைத்தளபதிகள்
,நாட்டுத்தலைவர்கள் என அனைவருக்காகவும் ஆசி வேண்டி பிராத்தனை செய்யப்பட்டமை
குறிப்பிடத்தக்க விடயமாகும்.
மேலும் இந்நிகழ்வுக்கு விமானப்படையின்
இயக்குனர் குழாம், சிரேஷ்ட அதிகாரிகள் உட்பட ஏனைய அங்கத்தவர்களும்
பங்குபற்றியமை விஷேட அம்சமாகும்.