இலங்கை விமானப்படை சேவா வனிதா பிரிவு, ரைபிள் கிரீன் மைதானத்தில் வெசாக் அன்னதான நிகழ்வை நடத்தியது.
வெசாக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, இலங்கை விமானப்படை சேவா வனிதா பிரிவு, 29 மே 2026 அன்று ரைபிள் கிரீன் மைதானத்தில் ‘சீனி சம்போல் பணிஸ்  மற்றும் இஞ்சி தேநீர் அன்னதானத்தை ’  வழங்கியது விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி  திருமதி கிரிஷாந்தி எதிரிசிங்கவின் வழிகாட்டுதலின் கீழ், விமானப்படை தலைமையகம் மற்றும் ஸ்ரீ ஜெயவர்தனபுர விமானப்படை நிலையத்தின் ஆதரவுடன் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

விமானப்படை தளபதி, எயார் மார்ஷல் பந்து எதிரிசிங்க மற்றும் விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவர் திருமதி கிரிஷாந்தி எதிரிசிங்க ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, வெசாக் கொண்டாட்டங்களில் பங்கேற்ற பக்தர்களையும் விருந்தினர்களையும் மகிழ்வித்தனர்.

வெசாக் பண்டிகையின் ஒரு பகுதியாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அன்னதான நிகழ்வில் , ஏராளமான பக்தர்களுக்கும் பொதுமக்களுக்கும் சீனி சம்போல்  பன்களும் இஞ்சித் தேநீரும் வழங்கப்பட்டன. இலங்கை விமானப்படை சேவா வனிதா பிரிவின் மூத்த உறுப்பினர்கள், விமானப்படை மேலாண்மைக் குழுவின் உறுப்பினர்கள், அதிகாரிகள், பிற தரப்பட்டவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். அவர்களது பங்கேற்பால், இந்நிகழ்ச்சி வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2026 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை