விமானப்படை "சேவா வனிதா " பிரிவின் வீடு வழங்கும் வைபவம்
4:07pm on Monday 25th April 2011
இலங்கை விமானப்படை "சேவா வனிதா " பிரிவின் அனுலா பெர்னாந்து அபிவிருத்தி திட்டதின் கீழ் பயங்கரவாத தாக்குதலில் மரணித்த படைவீரர்களுக்கு வீடுகள் அன்பளிப்பு செய்யும் திட்டத்தின் ஓர் அங்கமாக கடந்த 2007.01.04 ம் திகதியன்று கடுநாயக்க விமானப்படை முகாமில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த "பிளைட் சாஜன்ட்" சந்திரசேகர KPA அவர்களின் குடும்பத்தினருக்கு வீடு ஒன்று வழங்கி வைக்கப்பட்டது.

எனவே   இவ்வைபவம்   2011 ஏப்ரல் 23ம் திகதியன்று "பூகொட" பிரதேசத்தில் இலங்கை விமானப்படைத்தளபதி  "எயார் மார்ஷல்"  ஹர்ஷ அபேவிக்ரம அவர்கள்  தலைமையில் இடம்பெற்றமை  குறிப்பிடத்தக்க விடயமாகும்.

மேலும் இவ்வைபவத்தில் விமானப்படையின்  சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி. நீலிகா அபேவிக்ரம  அவர்கள்  உட்பட  விமானப்படையின் இயக்குனர்கள், அதிகாரிகள்  , படை உறுப்பினர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர் .





airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை