தூரநோக்கு மற்றும் பணி

தூரநோக்கு

ஆகாய சக்தியில் திறமை கொண்ட மனிதவளத்தின் மூலம் தேசிய பாதுகாப்பை உறுதிசெய்தல்.

 பணி

தேசிய பாதுகாப்புக்கு உதவும் விதமாக வான் நடவடிக்கைகழுக்கு தொழில் முறை ரீதியான விமானப்படையின் திறன்களை ஒழுங்குபடுத்தி ,பயிற்ச்சியழித்து தயார்படுத்துதல்

இலங்கை விமானப்படையின் தொழிற்படுகள்

  •     தந்திரோபாய நடவடிக்கைகளுக்கு ஆகாய உதவியை வழங்குவதுடன் தரை மற்றும் கடற்படையினருக்கு போக்குவருத்து வசதிகளை செய்து கொடுத்தல்.
  •     அரசாங்கத்தின் வேண்டுகோலுக்கு இணங்க மீட்பு பணிகளை மேற்கொள்வதுடன் அதற்கான போக்குவருத்து வசதிகளை வழங்குதல்.
  •     ஆகாய விமானங்கள் ,தரைமார்க்க போக்குவருத்து ,இலத்திரனியல் ,உபகரணங்கள் மற்றும் பிற பொறியியல் சேவைகளை வழங்குதல்.

  •     உள்நாட்டு பாதூகாப்பு நடவடிக்கைகளுக்கு படைகளை வழங்குதல்.
  •     இராணுவ ரீத்யற்ற ஆகாய நடவடிக்கைகள்,ஆராய்ச்சிகள் ,தேசிய அபிவிருத்தியை  நோக்கிய செயற்திட்டங்கள் என்பனவற்றை மேற்கொள்ளல்.

தேசியக்கொடி

Sri Lanka Flag

தேசியக்கொடிக்கு மரியாதை செலுத்தப்படல் வேண்டிய அதேநேரம் ஊக்கப்படுத்தல் வேண்டும் இதுவே தேசிய கொடி தொடர்பான அடிப்படை தத்துவமாகும் இந்த தத்துவம் ஒவ்வொரு இலங்கையரையும் கட்டாயம் அடையப்பட வேண்டும் .

ஏனெனில் தேசியக்கொடியானது எமது  தாய்நாட்டின் சின்னமாக திகழ்வதுடன் சுதந்திரம் மற்றும் எமது பிரஜைகளின் ஒற்றுமையையும் பிரதிபலிப்பதாகவும் அமைந்துள்ளது.அது எமது நம்பிக்கையாக விளங்குவதுடன் நாட்டின் எதிர்கால அபிலாஷையாகவும் திகழ்கிறது.
எமது முன்னைய தேசியக்கொடியானது கண்டி இராச்சியத்தின் இறுதி மன்னனிண் காலத்தில் அமைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

அது கபில வர்ண பின்னணியில் வலது புறத்தை நோக்கிய மஞ்சள் நிறத்தில் வாளேந்திய சிங்கம் ஒன்றினை கொண்டிருந்ததுடன் கபில நிற பின்னணிக்குள் மஞ்சள் நிறத்திலான நான்கு மூலைகளிலும் சிங்கங்களையும் கொண்டிருந்தது.
 
எனினும் எமது தற்போதைய தேசியக்கொடியானது 1978ம் ஆண்டு 07ம் திகதி அறிமுகப்படுத்தப்பட்ட இலங்கை ஜனநாயக குடியரசின் அரசியல் யாப்பில் ஒரு பகுதியாக உள்ளது.

அதில் கபில நிறப்பின்னணியில் மஞ்சள் நிறத்திலான வாளேந்திய சிங்கம் உள்ளதுடன் அந்த கபில நிற பின்ன்ணியின் நான்கு மூலைகளிலும் மஞ்சள் நிறத்திலான அரச இலைகள் காணப்படுகின்றன.

விமானப்படையின் கொடி

றோயல் சிலோன் விமானப்படையானது 1951ம் ஆண்டு மார்ச் இரண்டாம் திகதி குறூப் கெப்டன் ஜி.சி. பிலேடனினால் நிருவப்பட்ட போது றோயல் சிலோன் விமானப்படைக்கென சரியானதோர் கொடியொன்று வடிவமைக்கப்பட்டு இருக்கவில்லை இந்நிலையில் 1951ம் ஆண்டு பெப்ரவரி 23ம் திகதி இலங்கையின் தேசிய படைகள் மற்றும்  படைப்பிரிவுகளுக்கான வைபவ மற்றும் பிற சீருடைகளை தீர்மானிக்க ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டது.

இந்நிலையில் 1951- 11- 27ம் திகதி குறித்த ஆணைக்குழு விமானப்படை கொடியினை பயன்படுத்துவதற்கான அங்கீகாரத்தினை வழங்கியது இந்நிலையில் விமானப்படை தனது கொடிக்குப்பதிலாக அப்போது நாட்டின் கொடியாக இருந்த சிங்கக்கொடியினை பயன்படுத்தியிருந்தது.

அகொடியானது ஆகாய நீல நிறத்துடன் சிங்கக்கொடியானது இடது மேல் மூலையில் பயன்படுத்தப்பட்டது.எனினும் மீள்வடிவமைக்கப்பட்ட றோயல் விமானப்படையின் கொடியானது அதனை வலதுபக்க மேல் மூலைக்கு மாற்றியது.

விமானப்படையின் இலட்ச்சினை

முதலாவது உலகப்போரின் போது பிரித்தானிய விமானங்கள் எவ்விதமான அடையாளத்தினையும் கொண்டிருக்காத நிலையில் தரையிரங்கியது இதனால் தமது தரப்பினர்களின் தாக்குதல்களுக்கே அவை உள்ளாகின.

பிரித்தானியப் படைகள் தங்கள் விமானங்களை அடையாளம் கண்டு கொள்ள ஜூனியன் ஜெக் என்பவர் மேலும் கீழுமாக விமானங்களை வரைந்தார் ஆனால் துரதுஷ்டவசமாக விமானங்கள் தாழ்வாக குறுக்கே பயணிக்கும் போது அது பெரும்பாலும் ஜேர்மனி விமானங்களைப் போல் உள்ளதை ஜூனியன் ஜெக் அவதானித்தார் , அதனால் அப்பிர்ச்சினை தீரவில்லை.

1914ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் மிக எளிதாக அடையாளம் கானும் விதமாக பிரான்ஸ் விமானங்கள் சிவப்பு,வெள்ளை மற்றும் நீல நிறத்திலான வட்டங்களை பயன்படுத்தியது, எனினும் அதற்கு நேர் எதிரான முறையில் நீலம் ,வெள்ளை மற்றும் சிவப்பு வர்ணங்களை பிரித்தானியா பயன்படுத்தியது. இந்த அடையாள குறியீடானது பிரித்தானிய விமானப்படையினரினால் 1914 - 1918 வரையிலான காலப்பகுதியில் நடைப்பெற்ற யுத்தத்தின் போது பயன்படுத்தப்பட்டது.

1951ம் ஆண்டு றோயல் சிலோன் விமானப்படை தனது கொடியை வடிவமைத்தபோது அதன் அடையாளக்குறி நீலம் ,வெள்ளை மற்றும் சிவப்பு நிறங்களால் அடையாளப்படுத்தப்பட்ட்டது.

 சிங்கக் கொடியின் இரு வர்ணங்களும் இரு பக்கங்களிலும் குறியிடப்பட்டது.மூன்று வட்டங்கள் இரு வட்டங்களாக மாற்றப்பட்டதுடன் இவை சிவப்பு ,கபிலம்,மஞ்சள் ,பச்சை மற்றும் செம்மஞ்சள் நிறங்கள் தேசிய கொடியை பிரதிபலிக்கும் வகையில் இரு சிறகுகளிலும் அமைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
 
றோயல் சிலோன் விமானப்படையின் சேவைகளின் பாரம்பரியம் எனும் பிரசுரத்தின் படி அதன் கொளரவத்தை பேணும் விதமாக எண்ணிலடங்காதவர்கள் உயிரைவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 எவ்வாறாயினும் றோயல்சிலோன் விமானப்படை1951ம் ஆண்டு தனது கொடியை அறிமுகப்படுத்தியதையடுத்து ,றோயல் விமானப்படையின் இலட்ச்சினையானது நீலம் ,வெள்ளை மற்றும் சிவப்பு நிறங்களைக் கொண்ட இலட்ச்சினையானது மெதுவாக மாற்றப்பட்டது அதனடிப்படையில் இரு இறக்கைகளிலும் மஞ்சள் மற்றும் சிவப்பு ,கபிலம் ஆகிய நிறங்கள் பயன்படுத்தப்பட்டன.
 
என்றாலும் சிங்கக்கொடியின் வர்ணங்கள் பயன்படுத்தப்படும் போது அதுவே தேசிய கொடியாகவும் இருந்தது. றோயல் சிலோன் விமானப்படையானது ஏனைய விமானப்படைகளைப்போன்றே தனது நாட்டின் கொடியில் பயன்படுத்தப்படும் நிறங்களை பயன்படுத்த தீர்மானித்தது.

அதனடிப்படையில் மூன்று வட்டங்களாக இருந்தவை இரு வட்டங்களாக மாற்றப்பட்டதுடன் அவை சிவப்பு ,கபிலம் மற்றும் செம்மஞ்சல் நிறங்களைக் கொண்ட இறக்கைகளாக மாற்றப்பட்டதுடன் ஏனெனில் அந்நிறங்கள் எமது தற்போதைய தேசியக்கொடியில் பயன்படுத்தப்படும் நிறங்களாகும்.

Air Force Song

 

திரும்ப


airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை