முல்லேரிய மனநோய் மருத்துவமனைக்கு விமானப்படையின் உதவிகள்
8:53am on Friday 20th May 2011
கடந்த 1985ம் ஆண்டு முதல் இலங்கை விமானப்படை சேவா வனிதா பிரிவினால் நிர்வகிக்கப்பட்டு வரும் முல்லேரிய மனநோய் மருத்துவமனையின்  03ம் இலக்க மருத்துவ அறையின் புனர்நிர்மான பணியானது  கடந்த 13.05.2011ம் திகதியன்று விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி  திருமதி. நீலிகா அபேவிக்ரம உட்பட ஏனைய அஙத்தவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

அத்துடன் இங்கு மருத்துவ மனையின் கூரை ,சுவர் மற்றும் ஏனைய தளபாடங்கள் என்பன புனர்நிர்மானிக்கப்பட்ட அதேநேரம் சுமார் 5 இலட்சம் பெறுமதியான மருத்துவ உபகரணங்கள் ,கட்டில், துணிவகைகள்,  என்பனவும் வழங்கப்பட்டமையும் விஷேட அம்சமாகும்.

மேலும்  முல்லேரிய மருத்துவ மனையின் இயக்குனர் டாக்டர் .ஜயன் மென்டிஸ் அவர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டதுடன் ,நன்கொடைகளையும் ஏற்றுக்கொண்டார் .




airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை