இல.32 மற்றும் இல.33 ஆவது அடிப்படை பரிசூட் பயிற்சி நிறைவு விழா
2:51pm on Wednesday 22nd March 2017
2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 20 ஆம் திகதியன்று இலங்கை விமானப்படை அம்பாரை பரிசூட் பாடசாலையில் வைத்து இல.32 மற்றும் இல.33 ஆவது அடிப்படை பரிசூட் பயிற்சி பாடநெறி ஆகியவைகளின் பயிற்சி நிறைவு விழா விமானப்படை தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி அவர்களின் தலைமையில் மிக விமர்சியாக இடம்பெற்றது.

இந்த பாடநெறிக்காக 10 விமானப்படை அதிகாரிகளுடன் , 47 விமானப்படை வீரர்கள் , 12 விமானப்படை வீராங்களைகள் மற்றும் 03  கடற்படை அதிகாரிகளுடன் கடற்படையின் 03 பேர்கள் மற்றும் 03 தரைப்படை அதிகாரிகளுடன் தரைப்படையின் ஒருவரும் மற்றும் விசேட அதிரடிப்ப படையின் 05 பேர்கள் கலந்து கொண்டார்கள்.

மேலும் இங்கு விஷேட அணிவகுப்பு மரியாதை மேற்கொள்ளப்பட்ட அதேநேரம் இந்நிகழ்வுக்கு இலங்கை விமானப்படை பன்ப்பாளர்கள் உட்பட அம்பாரை விமானப்படை முகாமின் கட்டளை அதிகாரி குருப் கெப்டன் எச்.டப்.ஆர். சந்திம அவர்கள் , அம்பாரை விமானப்படை பரிசூட் பாடசாலையின் கட்டளை அதிகாரி ஸ்கொட்ரன் லீடர் சீ.எஜ். பியசுந்தர அவர்கள் மற்றும் முப்படையின் சிரேஷ்ட அதிகாரிகள் கலந்து சிறப்பித்தனர்.

 
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை