தேசிய கைப்பந்தாட்டப்போட்டியில் விமானப்படை பெண்கள் அணி வெற்றி.
4:43pm on Tuesday 24th May 2011
இலங்கை விமானப்படையின் கைப்பந்தாட்ட பெண்கள் அணி தேசிய கைப்பந்தாட்டப்போட்டியில் சாம்பியன் கிண்ணத்தை வென்றதுடன் ,ஆண்கள் அணி இரண்டாம் இடத்தினை பெற்றுக்கொண்டது, போட்டியானது 22.05.2011ம் திகதியன்று சுகததாஸ உள்ளக விளையாட்டு அரங்கில் இடம்பெற்றது.

எனவே இப்போட்டியில் பாதுகாப்பு சேவை அணிகள், சிறைச்சாலை அணி ,போக்குவருத்து சபை அணி,மட்டக்களப்பு ,திருகோணமலை மற்றும் அம்பாறை மாவட்ட அணிகள் என சுமார் பெண்கள் பிரிவில் ஒன்பது அணிகளும் ,ஆண்கள் பிரிவில் ஆறு அணிகளும் பங்கு பற்றியமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

மேலும் இங்கு விமானப்படை பெண்கள் அணியினர் இறுதிப்போட்டியில் ,இலங்கை கடற்படை அணியுடன் மோதியதுடன் இதில் கடற்படை அணியினை 13-05 எனும் புள்ளி  வித்தியாசத்தில் தோல்வியடையச்செய்து பத்மினி ராஜபக்ஷ தேசிய கிண்ணத்தை சுவீகரித்துக்கொண்ட அதேநேரம்  ஆண்கள் பிரிவில் இலங்கை தரைப்படை கிண்ணத்தை கைப்பற்றிக்கொண்டதுடன் ,விமானப்படை இரண்டாம் இடத்தினை பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.


airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை