பயிற்ச்சி முடித்து வெளியேறிய விமானப்படையினர்
9:05am on Thursday 16th June 2011
சுமார் 208 பயிற்ச்சியாளர்கள் 17 வார பயிற்ச்சியினை முடித்துக்கொண்டு 148வது நிரந்தர B  பிரிவின் கீழ் கடந்த 10.06.2011ம் திகதியன்று அம்பாறை விமானப்படை முகாமில் இருந்து வெளியேறினர்.

மேலும் இப்பயிற்ச்சியானது அணி வகுப்பு,துப்பாக்கிப்பிரயோகப்பயிற்ச்சி, அளவையியல், சண்டைப்பயிற்ச்சி, மனிதாபிமானம்,விமானப்படை சட்டம் மற்றும் முதலுதவி ஆகிய பயிற்ச்சிகளையும் உள்ளடக்கி  இருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

அத்தோடு இங்கு  இடம்பெற்ற அணிவகுப்பினை  "ஸ்கொட்ரன் லீடர்"  WKA விதான மற்றும் "பைலட் ஒபிஸ்ர்" ராஜகுரு ஆகியோரும் மேற்கொண்ட அதேநேரம்  இந்நிகழ்வுக்கு விமான தொழிற்பாட்டு பிரிவின் இயக்குனர் "எயார் வைஸ் மார்ஷல்" ககன் புலத்சிங்ஹல அவர்கள்  உட்பட அம்பாறை விமானப்படை முகாமின் கட்டளை அதிகாரி KH ஏகனாயக ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.



airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை