விமானப்படையின் நலன்புரி வர்த்தக நிலையம்.
10:12am on Tuesday 21st June 2011
இரத்மலானை விமானப்படை முகாமில் புதிதாக நிர்மானிக்கப்பட்ட நலன்புரி வர்த்தக நிலைய நிதியத்தினை இலங்கை விமானப்படைத்தளபதி " எயார் மார்ஷல்" ஹர்ஷ அபேவிக்ரம அவர்களால் வைபவரீதியாக கடந்த 14.06.2011ம் திகதியன்று திறந்து வைக்கப்பட்டது.

எனவே இந்நிலையமானது முன்னர் கொழும்பு விமானப்படை முகாமினில் அமைந்திருந்ததுடன் பின்னர் இடவசதி நிமித்தம் இரத்மலானை விமானப்படைக்கு நவீன வசதிகளுடன் இடமாற்றப்பட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

மேலும் இங்கு மதவழிபாடுகளை அடுத்து இந்நிலையம் திறந்துவைக்கப்பட்டதுடன் ,இதன்மூலமாக விமானப்படை மற்றும் வெளி இடங்களிலும் இருந்து பொருட்களை பெற்று விமானப்படை உறுப்பினர்களுக்கு மானிய விலையில் விற்கப்படுவது விஷேட அம்சமாகும்.

அத்தோடு இந்நிகழ்வுக்கு விமானப்படை நிர்வாகக்குழுவினர் மற்றும் இரத்மலானை விமானப்படை முகாமின் கட்டளை அதிகாரி "எயார் கொமடோர்" சுமங்கல டயஸ் ,விமானப்படை நலன்புரி திட்ட அதிகாரி "குரூப் கெப்டென்" JSI விஜேமான்ன உட்பட மேலும் பல சிரேஷ்ட அதிகாரிகளும் கலந்து சிறப்பித்தனர்.




airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை