புதிதாக நிர்மானிக்கப்பட்ட இல.03 முல்லேரிய மனநோய் மருத்துவ மனையின் சிகிச்சை பிரிவின் திறப்பு விழா
9:00am on Wednesday 29th June 2011
கடந்த 21.06.2011ம் திகதியன்று புதிதாக நிர்மானிக்கப்பட்ட இல்.03 முல்லேரிய மனநோய் மருத்துவ மனையின் சிகிச்சை அறையானது இலங்கை விமானப்படைத்தளபதி "எயார் மார்ஷல்" ஹர்ஷ அபேவிக்ரம அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது.

மேலும் இச்சிகிச்சை அறையானது இலங்கை விமானப்படை சேவா வனிதா பிரிவினால் கடந்த 1985ம் ஆண்டு முதல் நிர்வகிக்கப்படுவதோடு , இங்கு சுமார் 1 மில்லியன் ரூபா பெறுமதியான தளபாடங்கள் மற்றும் கூரைகளும் புனர்நிர்மானிக்கப்பட்டமை விஷேட அம்சமாகும்.

மேலும் இங்கு சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி .நீலிகா அபேவிக்ரம,  அதிகாரிகளின் மனைவிமார்கள்  மற்றும் ஓய்வு பெற்ற அதிகாரிகளும் கலந்து சிறப்பித்ததுடன் டாக்டர் புஷ்பா ரனசிங்க  அவர்கள் டாக்டர் ஜானக மென்டிஸ் அவர்கள் சார்பாக கலந்து கொண்டவர்களுக்கு நன்றியினை தெரிவித்துக்கொண்டார்.



airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை