பாலர் பாடசாலை திறப்பு விழா
3:09pm on Tuesday 5th July 2011
புதிதாக நிர்மானிக்கப்பட்ட ஹிங்குரங்கொடை விமானப்படை பாலர் பாடசாலையின் புதிய வகுப்பறை இலங்கை விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி. நீலிகா அபேவிக்ரம தலைமையில் கடந்த 27.06.2011ம் திகதியன்று திறந்து வைக்கப்பட்டது.

மேலும் இங்கு இலங்கை விமானப்படைஹிங்குரங்கொடை முகாமின் சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி.இனோகா ராஜபக்ஷ அவர்கள் பிரதம அதிதியினை  சிறுவர்களின் விஷேட இசை நிகழ்ச்சியுடன்  வரவேற்றார்.

மேலும் இதன் அடிப்படையில் சுமார் 20க்கும் மேற்பட்ட சிறுவர்கள் புதிதாக சேர்த்துக்கொள்ளப்படவுள்ளதுடன் ,இந்நிகழ்ச்சிக்கு ஹிங்குரங்கொடை விமானப்படை முகாமின் கட்டளை  அதிகாரி "குறூப் கெப்டென்" உதேனி ராஜபக்ஷ உட்பட பாலர் பாடசாலையின் பொறுப்பதிகாரி "ஸ்கொட்ரன் லீடர்" WVK வீரமன் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.



airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை