ரொதகம் போட்டிகான ஊடக சந்திப்பு
10:52am on Saturday 30th July 2011
இலங்கை விமானப்படையினால் 5 வது முறையாக நடாத்தப்படவுள்ள ரொடக்கம் வாகனப்பந்தய சுற்றுப்போட்டியின் நிமித்தம் ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் சந்திப்பொன்று கடந்த 21.07.2011ம் திகதியன்று விமானப்படைத்தளபதியின் தலைமையில்  இலங்கை விமானபடை தலைமையக கேட்போர்கூடத்தில் நடைப்பெற்றது.

எனவே போட்டியானது இலங்கை வாகன செலுத்துனர்கள் மற்றும் சாரதிகளின் சங்கத்தின் வழிகாட்டலுடன் ஆகஸ்ட் 01ம் திகதி 0830 மணியளவில் கடுகுறுந்த விமானப்படை முகாமினில் ஆரம்பமாக இருப்பதுடன் இங்கு 12 கார் போட்டிகள், 10 மோட்டார் வாகனப்போட்டிகள் உட்பட மொத்தமாக  22 போட்டிகள் நடாத்தப்படவுள்ளமை குறிப்பிட்டத்தக்க விடயமகும்.

மேலும் இம்முறை போட்டியின் பிரதான அனுசரனையாளராக இலங்கை வங்கி செயற்படவுள்ளதுடன் ,இணை அனுசரனையளர்களாக மக்கள் வங்கி, குவைட் விமான சேவை ,காகில்ஸ் நிறுவனம் ,கொகா கோலா நிறுவனம், எவியோன் தொழிநுட்பம், அமெரிக்க குடிநீர் உட்பட டிமோ நிறுவனமும் செயற்படவுள்ளது.அத்தோடு இங்கு அனுசரனையாளர்கள் தமது அனுசரனைக்கான காசோலைகளை வழங்கியதுடன் இதன் மூலம் திரட்டப்படும் வருமானமானது இலங்கை விமானப்படை சேவா வனிதா பிரிவினால் அதன் நலன்புரி நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படவுள்ளது.

எனவே இங்கு ரொதகம் சுற்றுப்போட்டியின் தலைவர் "எயார் வைஸ் மார்ஷல் " ரோகித பெர்னான்டு ,இலங்கை மோட்டார் வாகன் செலுத்துனர்கள் மற்றும் சாரதிகளின் தலைவர் திரு.யோகா பெரேரா உட்பட அனுசரனையாளர்களும் கலந்து கொண்டமை விஷேட அம்சாமாகும்.




airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை