இலங்கை விமானப்படை 68 வருட நாட்டின் சேவையை பெருமையுடன் கொண்டாடுகின்றது.
12:06pm on Friday 5th April 2019
2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 8 ஆம் திகதி இலங்கை விமானப்படை உத்தியோகபூர்வமாக 68 வது ஆண்டு நிறைவை கொண்டாடியது.விமானப்படை தளபதி  எயார் மார்ஷல் கபில ஜயம்பதி அவர்களின் தலைமையில்  நினைவு தின அணிவகுப்பு  பரீட்சிக்கப்பட்டு  விமானப்படை தலைமை காரியாலய வளாகத்தில்  விமானப்படை தளபதி அவர்களால் உரை நிகழ்த்தப்பட்டது.

இந்த உரை நிகழ்வு விமானப்படையின் அனைத்து  தளங்களிலும் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதன்போது  விமானப்படை தளபதி அவர்களினால்  விமானப்படை வீரர்களுக்கும் அவர்களின்  குடும்பத்தினருக்கும் விசேட நன்றி தெரிவிக்கப்பட்டது. இதன்போது  விமானப்படை தளபதி அவர்களினால்  விமானப்படை வீரர்களுக்கும் அவர்களின்  குடும்பத்தினருக்கும் விசேட நன்றி தெரிவித்தார். மேலும் கடந்த வருடம் விமானப்படையினரால்  விதைக்குண்டு வீச்சு , செயற்கை மழை திட்டம்  என்பனவும் மேலும் பல செயற்திட்டங்கள்  விமானப்படை  அங்கத்தவர்களின்  பங்கேற்பில் இடம்பெற்றதாகவும்  குறிப்பிட்டார். விமானப்படை வீரர்கள் மற்றும் சிவில் ஊழியர்கள்   ஓய்வு பெற்ற  படை வீர்ரகளுக்கான நலன்புரி சேவைத்திட்டம்கள்  தொடர்ந்தும் விமானப்படை மூலம் இடம்பெறுவதாக குறிப்பிட்டார் இதன்போது  விமானப்படை தளபதி அவர்களுக்கும்   விமானப்படை கோடிகளுக்கும் ஆசிர்வாதம் அளிக்கப்பட்டது.

முதல் தடவையாக இலங்கை விமானப்படை தலைமையகத்தில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்திருந்தது.அமரபுர மஹா நிக்காய மஹா சங்க நாயக்க கொட்டுகொட தம்மாவாசை தேரர் அவர்களின் தலைமையில் விமானப்படையின் அனைத்துத்தளங்களுக்குமான கோடிகளுக்கு ஆசிர்வாதம் அளிக்கப்பட்டது.

அதன்பின்பு  கொழும்பு  விமானப்படை தள  மைதானத்தில் இடம்பெற்ற  விமானப்படை  நினைவுதின வைபவத்தில்  விமானப்படை தளபதி அவர்கள் கலந்துகொண்டார் இந்த நிகழ்வுகளை கொழும்பு  விமானப்படை  கட்டளை அதிகாரி அவர்கள் ஏற்பாடு செய்து இருந்தார் மேலும்  விமானப்படை தலைமை அதிகாரி எயார் வைஸ் மார்ஷல்   சுமங்கள டயஸ் அவர்கள் மற்றும் அதிகாரிகள் படை வீரர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை