16 வது விமானப்படை தளபதி அவர்கள் விமானப்படை தளபதி பதவியில் இருந்து ஓய்வுபெறுகிறார்.
4:29pm on Friday 14th June 2019
16 வது  இலங்கை விமானப்படை  தளபதி எயார் ஷீப் மார்ஷல் கபில ஜயம்பதி அவர்கள்  விமானப்படை சேவையில் இருந்து ஓய்வுபெற்றதை அடுத்து 17 வது  விமானப்படை தளபதியாக  எயார் மார்ஷல் சுமங்கள டயஸ்  அவர்களிடம்  தனது பதவியை  இலங்கை விமானப்படை தலைமைக்காரியாலத்தில் வைத்து  முறைப்படி கையளிக்கும் நிகழ்வு கடந்த 2019 மே 29ம் திகதி இடம்பெற்றது.

சேவையில் இருந்து ஓய்வு பெரும் விமானப்படை  தளபதி அவர்களுக்கு  விமானப்படை வர்ண அணிவகுப்பு படை பிரிவினரால்  அணிவகுப்பு மரியாதையும் வழங்கப்பட்டது. இதன்போது  விமானப்படை தளபதி அவர்களால் விமானப்படை பற்றிய நிகழ்வுகள்  நினைவுபடுத்தப்பட்டதை அடுத்து இறுதியாக புதிய தளபதிக்கு பொறுப்பை வழங்கும் முகமாக  கோழிலனை  வழங்கி வைத்தார். இதன்போது விமானப்படை பணிப்பாளர்கள் மற்றும் தலைமை காரியாலய அதிகாரிகள்  படைவீரர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை