விமானப்படையின் துப்பாக்கி சூட்டு பயிற்சி வழங்குனார் தேசிய துப்பாக்கி சூட்டு பயிற்சியாளராக தெரிவு.
8:24am on Thursday 27th June 2019
நேபாளத்தில் இடம்பெற உள்ள தெற்காசிய  விளையாட்டு விழாவில்   இலங்கை தேசிய  துப்பாக்கி  சூடு  சம்மேளனத்தினால்  இலங்கை  விமானப்படையின்  தற்போதைய துப்பாக்கி சூடு பயிற்சியாளர்  வர்றேன்ட் அதிகாரி ( ஒய்வு பெற்ற )சந்தன அவர்கள் தேசிய துப்பாக்கி  சூடு  பயிற்சியாளராக  தெரிவு செய்யப்பட்டார்.

பாணந்துறையை சேர்ந்த சந்தன அவரகள் 1985 ம் ஆண்டு  விமானப்படையில் இணைத்துக்கொண்ட அவர் 2007 ம் ஆண்டு வரை சேவையாற்றினார்  பண்டாரகம கல்தேடோ கனிஷ்ட வித்தியாலயம் மற்றும் பின்வத்த சத்தர்மாசன பிரிவெண்  போன்றவற்றில் கல்வி கற்றார் அவர் 1995 ஆம் ஆண்டில் இந்தியாவில் நடைபெற்ற 7 வது தெற்காசிய விளையாட்டுப் போட்டிமற்றும் 1999ல் நேபாளத்தில்  இடம்பெற்ற  தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளிலும் துப்பாக்கி சூடு போட்டிகளில்   வெண்கலப்பதக்கமும் பெற்றார். குரோஷியாவில் 1998 உலக இராணுவ சாம்பியன்ஷிப் மற்றும் 2006 இல் ஆஸ்திரேலியாவில் நடந்த 18 வது காமன்வெல்த் விளையாட்டு போன்ற பல சர்வதேச போட்டிகளில் அவர் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார். இலங்கை விமானப்படையின் கைத்துப்பாக்கி பயிற்சியாளராக 2018 ம் ஆண்டு அவர் இணைந்துகொண்டார்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை