விமான ஓடுபாதை கட்டுமான பிரிவு 10 வது ஆண்டு நிறைவு விழாவை கொண்டாடுகிறது.
9:07am on Thursday 27th June 2019
ரத்மலான  விமானப்படை தளத்தில் அமைந்துள்ள விமான ஓடுபாதை  கட்டுமான பிரிவு படைப்பிரிவானது தனது  10 வது ஆண்டு நிறைவை கடந்த 2019 ஜூன் 20 ம் திகதி கொண்டாடுகிறது.

ஓடுபாதை பராமரிப்பு படைப்பிரிவாக ஆரம்பிக்க பட்ட காலத்தில்  ஓடுபாதைகள்  மாத்திரம் இவர்கள்  சீர்செய்துகொண்டு இருந்தனர்  அதனை பின்பு தொழிநுட்ப  வளர்ச்சிக்கு ஏற்ப கட்டிடம்கள்  நிர்மாணிக்கும்  வேலைகளையும்  ஆரம்பித்தனர் அதன் பின்பே 2013 ஜூன் 20 ம் திகதி இந்த படைப்பிரிவு  விமான ஓடுபாதை  கட்டுமான பிரிவு என மாற்றப்பட்டது.

நினைவுதினத்தை முன்னிட்டு பரீட்சனை  அணிவகுப்புடன்  ஆரம்பிக்கப்பட்டது  அதனை தொடர்ந்து  ரத்மலான  விளையாட்டு மைதானத்தில் கிரிக்கெட் சுற்றுப்போட்டியும்  நடைபெற்றது இதன்போது  ரத்மலான  விமானப்படை கட்டளை அதிகாரி எயார் கொமாண்டர்  விக்ரமரத்ன அவர்கள் பிரதான அதிதியாக கலந்துகொண்டார்.

  மஹரகம  புற்று நோய் வைத்தியசாலையில் இந்த நினைவு தினத்தை முன்னிட்டு  தானம் மற்றும் நற்கருமங்கள்  என்பன  இடம்பெற்றன.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை