விமானப்படையின் புதிய கட்டளை மாஸ்டர் வாரண்ட் அதிகாரி கடமைகளை பொறுப்பேற்றார் .
10:22am on Friday 28th June 2019
விமானப்படை தளபதி எயார் மார்ஷல்  சுமங்கள டயஸ் அவர்களினால் முன்னிலையில்  புதிய கட்டளை மாஸ்டர் வாரண்ட் அதிகாரியாக  மாஸ்டர் வாரண்ட் அதிகாரி எஸ்.எம்.என்.பி சமரகோன் அவர்கள் கடந்த 2019 ஜூன் 24ம் திகதி கடமைகளை பொறுப்பேற்றார்.

விமானப்படையின்  முதலாவது  மாஸ்டர் வாரண்ட் அதிகாரியான   மாஸ்டர் வாரண்ட் அதிகாரி ஜி.ஜி.எம்.ரஞ்சித் குமார  அவர்கள் சேவையில்  ஓய்வு  பெறுவதை அடுத்து அவர்  தனது பொறுப்புக்களைபுதிதாக நியமிக்கப்பட்ட மாஸ்டர் வாரண்ட் அதிகாரியான ஸ்.எம்.என்.பி சமரகோன் அவரக்ளிடன்  உத்தியோக பூர்வமாக  கடமைகளை  கையளிக்கும் அணிவகுப்பு மூலம்  கையழியத்தார்

மாஸ்டர் வாரண்ட் அதிகாரியான ஸ்.எம்.என்.பி சமரகோன் அவர்கள்  கடந்த 1997 நவம்பர் 17ம் திகதி  விமானப்படையில் ரெஜிமென்ட் பிரிவில் இணைந்துகொண்டார்.  2009 ம் ஆண்டு ஆயுத பயிற்றுவிப்பாளர் பாடநெறியையும்  2011 ம் ஆண்டு  அணிவகுப்பு பயிற்றுவிப்பாளர் பாடநெறியையும்   வெற்றிகரமாக நிறைவு செய்த அவர்  விமானப்படையின்  ரெஜிமென்ட் படைப்பிரிவின் பிராதன   வாரண்ட் அதிகாரியாக நியமிக்கப்பட்டு இருந்தார்  தற்போது அவர் விமானப்படையின் கட்டளை மாஸ்டர் வாரண்ட் அதிகாரியாக  நியமனம் பெற்றுள்ளார்.

கட்டளை மாஸ்டர் வாரண்ட் அதிகாரி நியமனம் ஆனது   முன்னால் விமானப்படை தளபதி எயார் ஷீப்  மார்ஷல் கபில ஜயம்பதி அவர்களினால்  சாதாரண நிலையில் உள்ள படைவீரர்கள்  மற்றும் விமானப்படை சிவில் ஊழியர்களின்  தேவைகளை நேரடியாக கண்காணிக்க நியமிக்க ஒரு மூத்த  நிலையாக இது இருந்தது  

இந்த நியமனம்  கடந்த 2017  ஜூலை 12 ம் திகதியே  விமானப்படைக்கு அறிமுகம் செய்யப்பட்டது  இதன் மூலம் நீராடிய அவர்  தளபதியிடம்  கலந்துரையாடி அவரக்ளின் பிரச்சினைக்ளுக்கு தீர்வு காணப்பதற்கு  இலகுவாக  இருக்கும் என்ற காரணத்தினால் இந்த நியமனம் உருவாக்கப்பட்டது.

இந்த நிகழ்வில்  விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுமங்கள டயஸ் மற்றும் தலைமை தளபதி எயார் வைஸ் மார்ஷல் சுதர்சன பத்திரன  மற்றும் பணிப்பளர்கள் ,அதிகாரிகள் ,படைவீரர்கள்  சிவில் ஊழியர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.


airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை