அகில இலங்கை " வான் ஓவியர் '' போட்டி நிகழ்வு.
11:51am on Thursday 1st August 2019
இலங்கை விமனப்படையின் 67 வது  வருட நினைவை முன்னிட்டு  அகில இலங்கை ரீதியில் நடத்தப்பட்ட''வான் ஓவியர் '' போட்டி நிகழ்வில்நாடுபூராகவும் உள்ள பாடசாலை மாணவமாணவிகள்  சுமார் 63000 ற்கும் மேற்பட்டோர் பங்குபெற்று தங்களது ஓவியங்களை வரைந்து சமர்பித்தனர்.

இந்த போட்டிகள்  சிரேஷ்ட மற்றும் கனிஷ்ட பிரிவுகளில் இடம்பெற்றது இந்த பிரிவுகளில் வயது அடிப்படையில் மூன்று பிரிவுகளாக 15 பேர்  தெரிவு செயப்பாட்டு அவர்களுக்கு பரிசில்கள் மற்றும் சான்றுதல்கள்  கடந்த 2019 ஜூலை 20 திகதி விமானப்படை தலைமை காரியாலயத்தில் விமானப்படை  தளபதி எயார் மார்ஷல்  சுமங்கள டயஸ் அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது.

அங்கு  சென்ற அவர்களுக்கு  ரத்மலான விமானப்படை தளத்தில் அமைந்துள்ள அருங்காட்சியக்கத்தை  பார்வையிடும்  வாய்ப்பும் அவர்களுக்கு வழங்கப்பட்டது அன்றய நாள் பூராகவும் அவர்களுக்கு சிறந்த பொழுதுபோக்காக  இது அமைந்தது.

இந்த நிகழ்வில் கொழும்பு   விமானப்படை   கட்டளை அதிகாரி எயார் கொமாண்டர் வர்ண குணவர்தன அவர்களும் கலந்துகொண்டார் இந்த நிகழ்வு எயார் வைஸ் மார்ஷல் ரோஹித பெர்னாண்டோ அவர்களினால் ஏற்பாடு செயப்பாட்டு இருந்தது.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை