முதலாம் பிரிவில் விமானப்படை மகளிர் கிரிக்கெட் அணியினர் சாம்பியன் பட்டத்தை பெற்றுக்கொண்டனர் .
10:04am on Tuesday 27th August 2019
சமீபத்தில் முடிவடைந்த பிரிவு I கிரிக்கெட் போட்டியில் இலங்கை விமானப்படை பெண்கள் ஏ அணியினர்  சாம்பியன் பட்டத்தை பெற்றுக்கொண்டனர்.  

விமானப்படை ஏ அணி அனைத்து போட்டிகளிலும் வென்றதுடன் இராணுவ பி அணிக்கு எதிரான போட்டியில் மோசமான வானிலை காரணமாக  விளையாடவில்லை.

சிரேஷ்ட விமானப்படைவீராங்கனை யசோதா மெண்டிஸ், சிரேஷ்ட விமானப்படைவீராங்கனை சமரி போல்கம்போல ,சிரேஷ்ட விமானப்படைவீராங்கனை  டிலானி மனோதரா ஆகியோர் சிறந்த துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தினர் ,அதேபோல்  சிரேஷ்ட விமானப்படை வீராங்கனை ஒஹிசாதி ரணசிங்க ,மற்றும் தாரகா செஹானி ஆகியோர் பந்துவீச்சில்  சிறப்பாக செயற்பட்டனர்.

குரூப் I கிரிக்கெட்டில் இலங்கை விமானப்படை பி அணி நான்காவது இடத்தையும், கடற்படை மற்றும் இலங்கை ராணுவம் ஏ அணி முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களையும் பிடித்தனர்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை