அனுராதபுர விமானப்படை தளத்தின் புதிய கட்டளை அதிகாரி நியமனம்.
6:40pm on Monday 9th September 2019
அனுராதபுர  விமானப்படை தளத்தின் கட்டளை புதிய  அதிகாரியாக எயார் கொமாண்டர் லியனகமகே  அவரகள் கடந்த 2019 ஆகஸ்ட் 16ம் திகதி  உத்தியோகபூர்வமாக கடமைகளை பொறுப்பேற்றார்  முன்னாள் கட்டளை அதிகாரி எயார் கொமாண்டர் அபேயசிங்க  அவர்களினால் பொறுப்புக்கள்  அணிவகுப்பு முறை மூலம் கையளிக்கப்பட்டது.

இந்த அணிவகுப்புக்கு விங் கமாண்டர் பெர்னாண்டோ  அவர்கள் தலைமை தாங்கினார்.

முன்னாள் கட்டளை அதிகாரி அபேயசிங்க அவர்கள் 2017ம் ஆண்டு ஜனவரி 10ம் திகதி அனுராதபுர கட்டளை அதிகாரியாக கடமைகளை  பொறுப்பேற்றார் அவர் விமானப்படை தலைமை காரியாலயத்தில் ரெஜிமென்ட்  படைப்பிரிவின் பதில் பணிப்பளராக பொறுப்பேற்க இருப்பதால் இந்த பொறுப்புக்களை புதிய கட்டளை அதிகாரியிடம்  பொறுப்புக்களை கையயளித்தார் .

புதிய கட்டளை அதிகாரியான எயர் கொமாண்டர் லியனகமகே  அவர்கள் ரஷிய நாட்டின் இலங்கைக்கான பாதுகாப்பு தூதுவராக கடமை புரிந்தார் . அவர் மேலும் அவர் எம்ஐ 17,பெல் 206, ஜெட் ரேஞ்சர்பெல் 212,பெல் 412 ஹெலிகாப்டர்ஆகிய விமானங்களில் கைதேர்ச்சி பெற்ற விமானி ஆவர்.

அணிவகுப்பு முடிவின் பின்பு எயார் கொமாண்டர் அபயசிங்க  அவர்களினால் உரை நிகழ்த்தப்பட்டது இதன்போது  அனைவருக்கும் சிறந்த பங்களிப்பை வழங்கியதற்கு  நன்றி தெரிவிக்கப்பட்டது.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை