விமானப்படை அதிகாரிகளுக்கான அலங்கார கருத்தரங்கு
4:11pm on Monday 29th August 2011
இலங்கை விமானப்படை அதிகாரிகளுக்கான அலங்கார கருத்தரங்கு கடந்த 23.08.2011ம் திகதியன்று இலங்கை விமானப்படை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

மேலும் இக்கருத்தரங்கானது ஆளுமை விருத்திற்கான இமேஜ் கல்லூரியின் ஸ்தாபகரும், சலூன் நயனாவின் உரிமையாளருமான திருமதி. நயனா கருனாரத்ன அவர்களினால் நிகழ்த்தப்பட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

மேலும் இங்கு விழாக்களை ஒழுங்கமைத்தல், சுகாதார பராமரிப்பு, உடை அணிதல் போன்றவைகள் விமானப்படை அதிகாரிகளுக்கு கற்பிக்கப்பட்டமை விஷேட அம்சமாகும்.

எனவே இங்கு பிரதம அதிதியாக இலங்கை விமானப்படைத்தளபதி "எயார் மார்ஷல்" ஹர்ஷ அபேவிக்ரம கலந்து சிறப்பித்தார். மேலும் விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி. நீலிகா அபேவிக்ரம மற்றும் விமானப்படை இயக்குனர்கள், அதிகாரிகள் பங்குபற்றியமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

மேலும் நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி. நீலிகா அபேவிக்ரம அவர்கள் திருமதி. நயனா கருனாரத்னவை அறிமுகப்படுத்தியதுடன், "ஸ்கொட்ரன் லீடர்" நதீரா தந்திரிகே நிகழ்ச்சியின் இறுதியில் நன்றி உரை நிகழ்த்தினார்.



airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை