கொழும்பு விமானப்படை சேவா வனிதா பிரிவினால் புத்தகம்கள் அன்பளிப்பு.
8:13am on Tuesday 12th November 2019
கொழும்பு  விமானப்படை  சேவா வனிதா பிரிவினால் சர்வதேச எழுத்தறிவு தினம் மற்றும் சர்வதேச தொண்டு தினத்தை  முன்னிட்டு  பின்தங்கிய பாடசாலைகளுக்கான  புத்தக விநியோக திட்டம்  கடந்த நவம்பர் 04 ம் திகதி  அன்று நடைபெற்றது.

இந்த வேலைத்திட்டம்  கொழும்பு  விமனப்படைதளத்தின்  முன்னாள் கட்டளை அதிகாரி  எயார் கொமாண்டர் வர்ணகுணவர்தன அவர்களின்  வழிகாட்டலின்கீழ் இடம்பெற்றுவந்த இந்த திட்டம் தற்போதைய கட்டளை அதிகாரியான  எயார் வைஸ் மார்ஷல்  லெப்ரோய் அவர்களினால் தொடர்ந்து செயற்படுத்தும் முகமாக இந்த வேலைத்திட்டம்  இடம்பெற்றது.

நவகதகமத்தில் உள்ள ரெலபனாவா தொடக்கப்பள்ளிக்கு மொத்தம் 1195 புத்தகங்கள் வழங்கப்பட்டன, 870 புத்தகங்கள் ரத்னபுர ராயல் கல்லூரிக்கு வழங்கப்பட்டன.    இந்த வேலைத்திட்டத்தில்  கொழும்பு தேசிய வைத்தியசாலை அதிகாரிகள்  மற்றும்  விமானப்படை  அதிகாரிகள் மற்றும் படைவீரர்கள் கலந்து கொண்டனர்.

 
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை