விருந்தோம்பல் மேலாண்மை பயிற்சி பாடசாலையில் பயிற்சியாளர்களுக்காக பயிற்சிநெறி வெற்றிகரமாக நிறைவுபெற்றது .
8:07am on Wednesday 26th August 2020
விமானப்படை  தளபாடங்கள் மற்றும் வளங்கள் பிரிவின் பணிப்பாளர்  எயார் வைஸ் மார்ஷல்  வீரசிங்க அவர்களின்   வழிகாட்டலின்கீழ்  விமானப்படை  பயிற்ச்சி பிரிவு பணிப்பாளர்  எயார் வைஸ் மார்ஷல் பாயோ  அவர்களின் மேட்பார்வையின்கீழ்   சிகிரியா விமனப்படை  தளத்தில் அமைந்துள்ள  விருந்தோம்பல் மேலாண்மை பயிற்சி பாடசாலையில்   பயிற்றுவிப்பாளர்களுக்கான  பயிற்ச்சிநெறி  இடம்பெற்றது .

ஒரு மாதகாலம் சரியாய் இடம்பெற்ற இந்த பயிற்சிநெறியானது ஆங்கில மொழியில்  இடம்பெற்றது   இதன்மூலம்  ஆங்கில  அறிவை விருத்திசெய்வதற்கான ஒரு சந்தர்ப்பமும் கிடைக்கப்பெற்றது என்பது விசேட அம்சமாகும்

இந்த பயிற்சிநெறியொயில் ஆங்கில வகுப்புக்கள்  ஆங்கில மொழி பயிற்சி அதிகாரியான  ஸ்கொற்றன்  ளீடர் பண்டார அவர்களின்  ஏற்பாட்டின் கீழ் மேலதிக விரிவுரைகள்  குரூப் கேப்டன்  பெர்னாண்டோ  மற்றும் குரூப் கேப்டன்  தசநாயக  , பிலைட்  லேப்ட்டினல்  ராஜபக்ஷ ஆகியோரினால் நேரடியாக நடத்தப்பட்டது   

இந்த பயிற்சிநெறியின் வெளியேற்று வைபவம்  கடந்த 2020  ஆகஸ்ட் 06 ம் திகதி   சிகிரிய  விமானப்படை  தளத்தின்  விருந்தோம்பல் மேலாண்மை பயிற்சி பாடசாலையில் இடம்பெற்றது இந்த நிகழ்விற்கு  பிரதம அதிதியாக சிகிரியா  விமானப்படை  தள  கட்டளை அதிகாரி  குரூப் கேப்டன்  நாணயக்கார  அவர்கள் கலந்துகொண்டார் மேலும்  ஹிங்குரகோட  விமானப்படை  தள   வளங்கள்  பிரிவின்  பொறுப்பதிகாரி  விங் கமாண்டர்  ரணதேவ  மற்றும் அதிகாரிகள்  படைவீரக்ள் கலந்துகொணடனர்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை