இலங்கை விமானப்படை ரக்பி அணியினர் 2022 ம் ஆண்டுக்கான ரக்பி செவன் கிண்ணத்தை சுபீகாரித்துக்கொண்டனர்
6:20am on Friday 21st October 2022
2021 ம் ஆண்டு வாரியார் கிண்ண செவன்ஸ் தொடரை கைப்பற்றியபின்பு  மீண்டும் 2022 ம் ஆண்டு தனது வெற்றியை ரக்பி செவன்ஸ்  கிண்ணத்தயும் இலங்கை விமானப்படை ரக்பி அணியினர் கைப்பற்றியுள்ளனர்

கடந்த 2022 அக்டோபர் 09  ம் திகதி  கொழும்பு ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் நடைபெற்ற ஹெவ்லொக் அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் வென்றதன்  மூலம்  இந்த ஆண்டுக்கான கிண்ணத்தை  சுவீகரித்துக்கொண்டது.
2022 இலங்கை ரக்பி 7ஸ் போட்டியின் கிளப் பிரிவுக்கான ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் தலா ஒரு அணியுடன் இலங்கை விமானப்படை போட்டியில் பங்கேற்றது.

2022 இலங்கை ரக்பி 7ஸ் போட்டியின் கிளப் பிரிவுக்கான ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் தலா ஒரு அணியுடன் இலங்கை விமானப்படை போட்டியில் பங்கேற்றது. இந்த போட்டித்தொரில் தனது ஆதிக்கத்தை செலுத்திவந்த ஆண்கள் அணியினர்  இறுதிவரை தொடர்ந்து விளையாடி பல அணிகளை வீழ்த்தி  இந்த ஆண்டுக்கான கிண்ணத்தை வெற்றிகொண்டது  

இந்த பரபரப்பான இறுதிப்போட்டியில் விமானப்படையின் தலைமை தளபதி  எயார் வைஸ் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ, விமானப்படையின்  ரக்பிதலைவர் , குரூப் கேப்டன் சுபாஷ் ஜயதிலக, ஏனைய சிறப்பு அழைப்பாளர்கள் மற்றும் ரக்பி அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை