2023ஆம் ஆண்டுக்கான ஆணையிடப்படாத அதிகாரிகளுக்கான விமானப் பாதுகாப்புப் பயிற்சிப் பட்டறை
3:54pm on Wednesday 6th September 2023
2023க்கான ஆணையிடப்படாத அதிகாரிகளுக்கான எண். 16 மற்றும் எண். 17  விமானப் பாதுகாப்புப் பயிற்சி பட்டறைகள் இரத்மலானை விமானப்படை தளத்தின் விமானப்படை அருங்காட்சியக கேட்போர் கூடத்தில் வெற்றிகரமாக நிறைவு பெற்றது.  பயிற்சிப் பட்டறை   இல . 16  2023 மார்ச் 13,  முதல்  2023  மார்ச் 17 வரை தொடங்கியது  மற்றும்பயிற்சிப் பட்டறை   இல. 17 2023 2023 ஆகஸ்ட் 14, முதல்  ஆகஸ்ட் 18,  வரையம் அனைத்து பணிப்பாளர் சபைகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் 44 ஆணையரல்லாத அதிகாரிகளின் பங்குபற்றுதலுடன் நடைபெற்றது.

இந்த ஐந்து நாள் பயிற்ச்சி பட்டறையில் பாதுகாப்பு மேலாண்மை அமைப்புகள், விமான உடலியல் மற்றும் உளவியல், விமான விபத்து விசாரணை, விமான தீயணைப்பு மற்றும் விமான போக்குவரத்து சேவைகள் போன்ற விமானப் பாதுகாப்பின் முக்கிய பகுதிகளை  உள்ளடக்கியது.அனைத்து விரிவுரைகளும் தகுதி மற்றும் அனுபவம் வாய்ந்த அதிகாரிகள் குழுவால் நடத்தப்பட்டது.

தொடக்க உரையை விமான பாதுகாப்பு பணிப்பாளர் எயார் கொமடோர் அமல் பெரேரா நிகழ்த்தினார். பணிமனை இலக்கம் 16 மற்றும் இலக்கம் 17க்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு முறையே 2023 ஆம் ஆண்டு மார்ச் 17 மற்றும் 18 ஆம் திகதிகளில் அதிகாரி இலக்கம் 4 எலைட் பாதுகாப்பு படையின் கட்டளை அதிகாரி குரூப் கப்டன் ஹேவாவிதாரண மற்றும் எயார் கொமடோர் அமல் பெரேரா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. மேலும் இந்த சான்றுகள் வழங்கும் நிகழ்வில்  அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்

No. 16 workshop

No. 17 workshop
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை