விமானப்படை மகளிர் அணியினர் பாதுகாப்புசேவைகள் கூடைப்பந்து போட்டித்தொடரில் வெற்றிபெற்றனர்.
10:55pm on Saturday 23rd September 2023
இலங்கை விமானப்படை மகளிர் கூடைப்பந்து அணி 39-26 என்ற புள்ளிக்கணக்கில் இலங்கை கடற்படை மகளிர் கூடைப்பந்து அணியை தோற்கடித்து 12வது பாதுகாப்பு சேவைகள் கூடைப்பந்து சம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் வெற்றி பெற்றது.இந்தப் போட்டி இலங்கை இராணுவ பனாகொட உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்றது. இலங்கை விமானப்படை மகளிர் அணி தொடர்ச்சியாக இரண்டாவது வருடமாக இந்த மகுடத்தை வென்றமை விசேட அம்சமாகும்.

இறுதிப் போட்டிகள் மற்றும் பரிசளிப்பு விழா இராணுவ கூடைப்பந்தாட்டத் தலைவர் மேஜர் ஜெனரல் வணிகசேகர தலைமையில் இடம்பெற்றது.

இந்த இறுதிப் போட்டியில் விமானப்படை துணைத் தளபதியும்  மற்றும் கூடைப்பந்து தலைவரான எயார் வைஸ் மார்ஷல்  சேனாநாயக்க, விமானப்படை கூடைப்பந்து சம்மேளன  செயலாளர் விங் கமாண்டர் .டயஸ், விமானப்படை விளையாட்டு கவுன்சில் உறுப்பினர்கள், சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் ஏனைய வீரர்கள் கலந்துகொண்டனர். மேலும், பரிசளிப்பு விழாவில்பிரதி தலைமை தளபதி  அவர்களும் கலந்து கொண்டு, இரண்டாம் இடம் பெற்ற அணிகளுக்கு கோப்பைகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை