விமானப்படைத் தளபதி தேசிய பாதுகாப்புக் கல்லூரியில் அதிதி விரிவுரையை வழங்குகிறார்
7:59pm on Tuesday 28th November 2023
தேசிய பாதுகாப்பு கல்லூரியில் 2023 ஆம் ஆண்டு ஒக்டோபர் 30 ஆம் திகதி முப்படை மற்றும் பொலிஸ் பாடநெறி இலக்கம் 02 அதிகாரிகளுக்கு "தேசிய பாதுகாப்பில் இலங்கை விமானப்படையின் கவனம்" என்ற தலைப்பில் அழைக்கப்பட்ட விரிவுரையை வழங்க எயார்  மார்ஷல் உதேனி ராஜபக்ஷ அழைக்கப்பட்டார்

தேசிய பாதுகாப்புக் கல்லூரிக்கு வருகை தந்த விமானப்படைத் தளபதியை, பாதுகாப்புக் கல்லூரியின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சுஜீவ செனரத் யாப்பா வரவேற்று, தேசிய பாதுகாப்புக் கல்லூரியின் சிரேஷ்ட பணிப்பாளர் கொமடோர் சுஜீவ வீரசூரிய அவர்கள்  விமானப்படைத் தளபதி அவர்களின்  உரைக்கு முன்  அறிமுகக் குறிப்பு ஒன்றைச் செய்து பின்னர் விமானப்படைத் தளபதியின் உரைக்கான நடவடிக்கைகளை  ஒப்படைத்தார்.
இந்நிகழ்வை சிறப்பிக்கும் வகையில், நிகழ்வின் இறுதியில்

விமானப்படைத் தளபதி மற்றும் தேசிய பாதுகாப்புக் கல்லூரியின் கட்டளைத் தளபதி ஆகியோருக்கு இடையில் நினைவுப் பரிசுகள் பரிமாறிக் கொள்ளப்பட்டது. எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷவின் தேசிய பாதுகாப்பு கல்லூரிக்கு விஜயம் செய்ததை நினைவு கூறும் வகையில், விருந்தினர் புத்தகத்தில் வாழ்த்துக் குறிப்பும் வைக்கப்பட்டிருந்தது.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை