விமானப்படை வீரர்கள் 2023 தேசிய நீர் பந்து சாம்பியன்ஷிப்பை வெறிப்பேற்றனர்
8:10pm on Tuesday 28th November 2023
இலங்கை நீர் விளையாட்டு  சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட தேசிய நீர் பந்து  சம்பியன்ஷிப் 2023 ஒக்டோபர் 29 முதல் ஒக்டோபர் 30 வரை இரத்மலானை விமானப்படை நீர்வாழ் வளாகத்தில்

நடைபெற்றது. றோயல் கல்லூரி யூனியன் அக்வாடிக் கிளப்பிற்கு எதிரான இறுதிப் போட்டியில் விமானப்படை ஆண்கள் அணி 15 - 08 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்று தொடர்ந்து இரண்டாவது தடவையாக தேசிய நீர் பந்து  சம்பியன்ஷிப்பை வென்றதுடன் விமானப்படை மகளிர் அணியும் பதினைந்து வருடங்களின் பின்னர் தேசிய நீர் பந்து சம்பியன்ஷிப்பை வெற்றிபெற்றனர்.

ஆண்கள் பிரிவின் கீழ் 9 நீர் விளையாட்டுக் கழகங்களும், பெண்கள் பிரிவில் இருந்து 3 விளையாட்டுக் கழகங்களும் சம்பியன்ஷிப்பிற்காகப் போட்டியிட்டன. இறுதிப்போட்டியில் பிரதம அதிதியாக விமானப்படை நீர் விளையாட்டு ரிசர்வ் செயலாளர் குரூப் கப்டன் சமிர லங்காதிலக கலந்து கொண்டார்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை