தேசிய பாதுகாப்பு கல்லூரி ஆராய்ச்சி மாநாடு 2023
9:21pm on Tuesday 28th November 2023
தேசிய பாதுகாப்பு கல்லூரி ஆராய்ச்சி மாநாடு நவம்பர் 02, 2023 அன்று கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் பட்டதாரி கற்கைகள் பீட கேட்போர் கூடத்தில் "ஒரு மாறும் சூழலில் பாதுகாப்பு சவால்களை மூலோபாயமாக்குதல்" என்ற கருப்பொருளின் கீழ் நடைபெற்றது.

பாதுகாப்பு ஆராய்ச்சி கலாச்சாரத்தை மேம்படுத்தவும், தேசிய பாதுகாப்பு மற்றும் மூலோபாய ஆய்வுகள் தொடர்பான ஆராய்ச்சி யோசனைகளை ஆராய்வதற்கான சூழலை உருவாக்கவும் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.

மூலோபாய ஆய்வுகள், இலங்கை ஆய்வுகள், சர்வதேச பாதுகாப்பு, பொருளாதார பாதுகாப்பு, புவிசார் அரசியல், விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான பல்வேறு தலைப்புகளில் பாடநெறி பங்கேற்பாளர்களின் பங்களிப்புகள் நடைபெற்றன. கேள்வி பதில் அமர்வின் போது அளிக்கப்பட்ட விளக்கங்கள், ஆக்கப்பூர்வமான குழு விவாதங்கள் பார்வையாளர்களுக்கு பல வழிகளில் பயனளித்தன.
பிரதம அதிதியாக இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா கலந்து கொண்டதுடன், முக்கிய உரையை

இலங்கை மேல் நீதிமன்ற நீதிபதி யசந்த கோதாகொட நிகழ்த்தினார். இந்த நிகழ்வில் தலைமை அதிகாரி எயார் வைஸ் மார்ஷல் சம்பத் விக்ரமரத்ன, பயிற்சி பணிப்பாளர் நாயகம், எயார் வைஸ் மார்ஷல் லசித சுமனவீர, சிரேஷ்ட விமானப்படை அதிகாரிகள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை