2023ம் ஆண்டுக்கான விமானப்படை தளங்களுக்குஇடையிலான வருடாந்த இடைநிலை வுஷு போட்டிகள்
1:16pm on Tuesday 12th December 2023
2023ம் ஆண்டுக்கான விமானப்படை தளங்களுக்குஇடையிலான  வருடாந்த இடைநிலை வுஷு போட்டிகள் கடந்த 2023 டிசம்பர் 06ம் திகதி தொடக்கம் டிசம்பர் 08ம் திகதி வரை  கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் அமைந்துள்ள உள்ளகரங்கில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வின் இறுதிப்போட்டிகள்  விமானப்படை வளங்கள் பிரிவின் பணிப்பாளர்  நாயகம் எயார்   வைஸ் மார்ஷல்  கொஸ்வத்த அவர்களின் பங்கேற்பில் இடம்பெற்றது.

சர்வதேச வுஷூ சம்மேளனத்தின் (IWUF) புதிய விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளின் கீழ் ஆண்களுக்கான 08 எடைப் பிரிவுகளிலும், பெண்களுக்கான 06 எடைப் பிரிவுகளிலும் இந்த நிகழ்வு நடத்தப்பட்டது ஆடவர் சம்பியன்ஷிப் ரத்மலானை விமானப்படை தளம் கைப்பற்றியது, பெண்களுக்கான சாம்பியன்ஷிப்பை கொழும்பு விமானப்படை நிலையம் கைப்பற்றியது இரண்டாமிடத்தை முறையே  கொழும்பு மற்றும் ரத்மலான விமானப்படை தளங்கள் ஆடவர் ம்,ஆற்றும் மகளிர் பிரிவில் பெற்றுக்கொண்டனர்.


இந்த நிகழ்வில் விமானப்படையின் வுஷூ பிரிவின்  தலைவர், குரூப் கேப்டன் கே.ஏ.பி.எஸ்.குருவிட்ட, மற்றும் விமானப்படை விளையாட்டு இயக்குனரகத்தின் அதிகாரிகள், மூத்த அதிகாரிகள் மற்றும் படைவீரர்கள்  இறுதிப் போட்டிகள் மற்றும் பரிசளிப்பு விழாவைக் காண பங்கேற்றனர்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை