எயார் வைஸ் மார்ஷல் வருண குணவர்தன அவர்கள் இலங்கை விமானப்படை சேவையில் இருந்து ஓய்வுபெற்றார்.
8:33pm on Sunday 28th January 2024
எயார் வைஸ் மார்ஷல் வருண குணவர்தன 32 வருடங்களுக்கும் மேலான பெருமைமிக்க சேவையின் பின்னர் இலங்கை விமானப்படை சேவையில் இருந்து  2024  ஜனவரி 13ம்  திகதி அன்று ஓய்வு  பெற்றார்.ஓய்வுபெறும் போது இலங்கை விமானப்படையில் பிரதி தலைமை தளபதியாக கடமையாற்றினார்.

எயார் வைஸ் மார்ஷல் குணவர்தன அவர்கள்  கடந்த 2024 ஜனவரி 09ம் திகதி விமானப்படை தளபதி எயார்  மார்ஷல் உதேனி   ராஜபக்ஷ  அவர்களின் காரியாலயத்தில் பிரியாவிடை பெற்றார் எங்கள் தாய்நாட்டிற்கு தேவைப்படும் காலங்களில் அவர் முக்கிய பங்கேற்பாளர்களில் ஒருவராக இருந்தார் என்றும், அவரது வீர வரலாறு விமானப்படையின் வரலாற்றில் பதிவு செய்யப்படும் என்றும் விமானத் தளபதி வலியுறுத்தினார்.இதனை நினைவு கூறும் வகையில் விமானப்படை தளபதி மற்றும் எஎயார் வைஸ் மார்ஷல் குணவர்தன ஆகியோருக்கு இடையில் நினைவு பரிசுகள் பரிமாறிக் கொள்ளப்பட்டன.

கடைசியாக பாதுகாப்பு தலைமையக வளாகத்தில் உள்ள விமானப்படைத் தலைமையகத்திலிருந்து புறப்படுவதற்கு முன்னர், 2024 ஜனவரி 12 அன்று இலங்கை விமானப்படையின் வண்ணப் பிரிவினால் அவருக்கு சம்பிரதாய மரியாதை அணிவகுப்பு  வழங்கப்பட்டது விமானப்படை தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ மற்றும் விமானப்படை முகாமைத்துவ சபை உறுப்பினர்களின் பங்குபற்றுதலுடன்எயார் வைஸ் மார்ஷல் குணவர்தனவிற்கு பிரியாவிடை இரவு விருந்தொன்று இடம்பெற்றது. . இந்த 6483
தனித்துவமான நிகழ்வு கொழும்பு விமானப்படை தலைமையக அதிகாரிகள் உணவக வளாகத்தில் நடைபெற்றது.

எயார் வைஸ் மார்ஷல் குணவர்தன 1988 ஆம் ஆண்டு இலங்கை விமானப்படையின் 19வது கெடட் அதிகாரி பாடநெறியில் கெடட் அதிகாரியாக தனது பணியை ஆரம்பித்தார். இலங்கை விமானப்படையின் தியத்தலாவ முகாமில் அடிப்படைப் போர்ப் பயிற்சியைப் பெற்ற அவர், பின்னர் ரெஜிமென்ட் கெடட் அதிகாரியாக உயர்நிலைப் பயிற்சியை முடித்தார். தனது பயிற்சியை முடித்த பின்னர், 1990 இல் அவர் விமானியாக நியமிக்கப்பட்டார், பின்னர் அவர் இலங்கை விமானப்படைத் தளத்தின் வவுனியாவின் ரெஜிமென்ட் பிரிவில் 5 ஆண்டுகள் பணியாற்றினார். 1995 ஆம் ஆண்டு சிகிரியா முகாமில் உள்ள இலங்கை விமானப்படையின் வெடிகுண்டுகளை அகற்றும் பயிற்சிப் பள்ளியில் வெடிகுண்டுகளை அகற்றும் பயிற்சியை வெற்றிகரமாக முடித்தார்.


ஏயார் வைஸ் மார்ஷல் குணவர்தன அவர்கள் அவரது கல்வி வாழ்க்கையில் இந்தியாவில்  கனிஷ்ட கட்டளை  மற்றும் பணியாளர் பயிற்ச்சி பாதுகாப்புக் கற்கைகளில் முதுகலைப் பட்டம், களனிப் பல்கலைக்கழகம்,மேம்பட்ட பாதுகாப்பு மேலாண்மை, இந்தியாவில் மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் படிப்பு உட்பட பல படிப்புகளை ,மேற்கொண்டுள்ளார் பாகிஸ்தானில் விமான வெடிகுண்டு பராமரிப்பு படிப்பு, அமெரிக்காவின் ஹவாயில் நெருக்கடி மேலாண்மை படிப்பு மற்றும் பங்களாதேஷின் தேசிய பாதுகாப்பு கல்லூரியில் பட்டப்படிப்பு மற்றும் "ndc" என்ற பட்டத்தையும் பெற்றுள்ளார்.

தனது இராணுவப் பணியின் போது எதிரிகளை எதிர்கொள்ளும் அவரது சிறப்பான நடத்தைக்காக 'ரண சூரா பதக்கம்'விதிவிலக்கான திறமை மற்றும் நன் நடத்தைக்கான சிறந்த சேவைப் பதக்கம் 'பூர்ண பூமி பதக்கம்', 'வடக்கு மற்றும் கிழக்கு நடவடிக்கை பதக்கம்', '50வது ஆண்டு விழா (இலங்கை விமானப்படை) பதக்கம், 'இலங்கை ஆயுத சேவைகள் நீண்ட சேவை பதக்கம்', 'ரிவிராச பிரச்சார சேவை பதக்கம்', '50வது சுதந்திரம்' ஆகிய விருதுகளை முன்மாதிரியான தலைமைத்துவம் மற்றும் சிறந்த சேவைக்காக பெற்றுள்ளார்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை