பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலைய விமானப்படை தளத்திற்கு 26 வது வருட நிறைவு.
10:46pm on Wednesday 20th March 2024
பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலைய  விமானப்படை தளத்திற்கு 26 வது வருட நிறைவு  கடந்த 2024 ஜனவரி 26ம் திகதி   முன்னாள் கட்டளை அதிகாரி குரூப் கப்டன் நிஷாந்த பிரியதர்ஷன அவர்களின்  வழிகாட்டலின்கீழ் இடம்பெற்றது.

 அன்றய தினம்  காலை அணிவகுப்பு நிகழ்வுகளுடன் ஆரம்பானது  இதன்போது உரையாற்றிய கட்டளை அதிகாரி 26 வருடங்களாக பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பிரதான பாதுகாப்பு சேவை வழங்குனராக இந்த இடத்தின் முக்கியத்துவத்தை குறிப்பிட்டார் மேலும், கடந்த 26 ஆண்டுகளில் முகாமின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்த அதிகாரிகள், விமானப்படையினர், விமானப் பெண்கள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

பகல் கொண்டாட்டத்துடன் இணைந்து, 2024 ஜனவரி 23 அன்று முகாம் வளாகத்தில் இரவு முழுவதும் பிரித் ஓதுதல் நிகழ்ச்சியும், மறுநாள் ஜனவரி 24, 2024 அன்று காலை வணக்கத்துக்குரிய தேரர்கள்  15 பேருக்கு  அன்னதானமும் வழங்கப்பட்டது.

அனைத்து சேவைகள் மற்றும் சிவில் ஊழியர்களின் பங்குபற்றுதலுடன் சிநேகபூர்வ கிரிக்கெட் போட்டியுடன் ஆண்டு விழா நிறைவு பெற்றது.


airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை