'ரணவிரு ரியல் ஸ்டார் பாகம் 2' போட்டியில் விமானப்படையின் திறமைகள்
3:49pm on Thursday 12th July 2012
இலங்கை விமானப்படையை சேர்ந்த கோப்ரல் இமாலி அனுருத்திகா பல சவால்களையும், தடைகளையும் தாண்டி இறுதி 5 போட்டியாளர்களுக்குள் நுழைந்துள்ளதுடன், தனது பிரதிவாதிகளுக்கு ஒரு கடும் போட்டியினை வழங்கவும் தயார் நிலையில் உள்ளார்.

எனவே கலேவெல பிரதேசத்தை வசிப்பிடமாகக்கொண்ட கோப்ரல் இமாலி அனுருத்திகா சிறு பிராயத்தில் இருந்தே சங்கீதக்கலையில் தேர்ச்சி பெற்று இருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

அத்தோடு இவர் தனது கல்வியினை இப்பாகமுவ மத்திய கல்லூரியில் பயின்றதுடன், க.பொ.த.(ச.தரம்), க.பொ.த.(உ.தரம்) போன்ற பரீட்சைகளிலும் சங்கீதத்துக்கான உயர் பெறுபேறுகளையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இவர் 2004ம் ஆண்டு விமானப்படையின் இணையும் வரையில், பல்வேறுப்பட்ட திறமைகளை தனது கல்லூரி வாழ்க்கை தொடக்கம் நிறைவேற்றியதுடன், தற்போது இலங்கை விமானப்படையில் கணக்காளராக பணியாற்றிக் கொண்டிருக்கின்றமை விஷேட அம்சமாகும்.

அத்தோடு 'ரணவிரு ரியல் ஸ்டார் பாகம் 2' தொடங்கியவுடன் அதில் பங்கு பற்ற வேண்டும் என்ற ஒரு தேவை இவருக்கு இருக்காவிடினும், இவரது மேல் அதிகாரியான 'குருப் கெப்டன்' RAUP ராஜபக்ஷவின் கட்டாயப்படுத்தலுக்கு இணங்க இதில் பங்குபற்றியதுடன் இன்று இதன் முடிவு தற்போது வரைக்கும் நல்லதாகவே இருக்கின்றது.

எனவே தற்போது போட்டியில் பின்னோக்கிச் செல்ல எந்த தேவையும் இவருக்கு இல்லை ஏனெனில் இவரது விருப்பமான பாடகிகளான இலங்கையின் பிரபல பாடகி நந்தா மாலினி, சந்திரலேகா பெரேரா, இந்திரானி பெரேரா உட்பட ரயினி சாருகா போன்ற இளம் பாடகிகளின் பாடல்களை விரும்பி பாடி வருகின்றார்.

இறுதியாக விமானப்படை அங்கத்தவர்களினதும், அவரது குடும்பத்தினரதும் ஆதரவு தொடர்ந்து கிடைத்துக்கொண்டே இருக்கும் அதேநேரம் உங்களது ஆதரவினையும் RSS 4 என டைப் செய்து 7770 க்கு SMS செய்தி ஊடாக வழங்க முடியும்.




airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை