கட்டுநாயக்க விமானப்படை பாலர் பாடசாலையின் கலை விழா மிக விமர்சியாக கொண்டாடப்பட்டது.
7:28pm on Tuesday 7th December 2010
கட்டுநாயக்க விமானப்படைமுகாமில்'சேவா வனிதா'அலகினால் நடாத்தப்பட்டு வரும் சர்வதேச பாலர் பாடசாலையின் வருடாந்த கலைவிழா நிகழ்ச்சிகள் நேற்று முந்தினம் மிகவும் விமர்சியாக நடைபெற்றது.சிறு பிராயத்தில் இருந்தே குழந்தைகளின் உடல் மற்றும் உள வளர்ச்சிக்கான சர்வேதேச கல்வியினை வழங்கும் இப் பாலர் பாடசாலையின் கடந்த ஒரு வருட பூர்த்தியினை முன்னிட்டு  37 மாணவர்களைக் கொண்ட குழுவினால்  நடனம்,பாடல்,சங்கீதம்,அணிவகுப்பு,போன்ற கலை நிகழ்ச்சிகள் அரங்கேற்றப்பட்டதுடன் இது அதிதிகளின்  பெறும் பாராட்டையும் பெற்றுக்கொன்டது.இந்நிகழ்விற்காக விமானப்படையின் 'சேவா வனிதா'அலகின் தலைவி திருமதி.

நெலுன் குணதிலக பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன், விமானப்படையின் நலன்புரி அதிகாரி 'எயார் வைஸ் மார்சல்' டப்.எ. சில்வா மற்றும் அவரது பாரியார் உட்பட கடுநாயக்க விமானப்படை முகாமின் கட்டளை அதிகாரி 'எயார் கொமடோர்' சி.ஆர்.குருசிங்கவும் கலந்து சிறப்பித்தனர்.



airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை