விமானப்படையின் உதவிக்கரங்கள்
8:49am on Thursday 13th January 2011
இலங்கை விமானப்படையானது கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணப்பணிகளை M.I. - 17 காற்றாடி விமானம் மூலம் தொடர்கின்றது.

 இதன் அடிப்படையில் 01- 11- 2011ம் திகதியன்று இலங்கை விமானப்படையின் சீனக்குடா முகாமினால் பருப்பு,சீனி,அரிசி,பால்மா,உட்பட சுமார் 5200 Kg.நிறையுடைய உலர் உணவுப்பொருட்களை M.I.- 17 காற்றாடி விமானம் மூலம் சோமாவதி மற்றும் பொலந்நறுவை பிரதேச மக்களிடையே பகிர்ந்தளித்தனர்.

இதனைத்தொடர்ந்து விமானப்படையின் கிங்குரங்கொடை முகாமினால் சுமார் 9700 Kg.நிறையுடைய அத்தியவசிய உலர் உணவுப்பொதி மற்றும் சுமார் 2800 Kg.நிறையுடைய கோதுமை மா ஆகியன ஆகாய மார்க்கமாக சோமாவதி கல்லூரி மைதானத்தில் இரக்கப்பட்டது விஷேட அம்சமாகும்.

எனவே இவ்வாரான உதவிகளை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தற்காலிகமாக தங்கியிருக்கும் பகுதிகளில் மேற்கொண்டதுடன்,மேலும் பல உதவிகளை மேற்கொள்ள விமானபடையாது தயார் நிலையில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை