புதிதாக நிர்மாணிக்கப்பட்ட முன்னிலை பாடசாலை , மற்றும் நாளாந்த பராமரிப்பு நிலையம் , வான் சாரணர் இல்லம் என்பன விமானப்படை தளபதியினால் திறந்துவைப்பு.
விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன அவர்களினால் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட  முன்னிலை பாடசாலை , மற்றும் நாளாந்த பராமரிப்பு நிலையம் , வான் சாரணர் இல்லம் கடந்த 2021 மார்ச் 23ம் திகதி  கொழும்பு  விமானப்படைத்தளத்தில்  இடம்பெற்றது.

இந்த நிகழ்வில்  விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி .சார்மினி பத்திரன அவர்களும் கலந்துகொண்டார் .  இந்த நிகழ்வில் கலந்து கொண்ட விமானப்படை தளபதி மற்றும்  சேவா வனிதா பிரிவின்  தலைவி ஆகியோரை   கொழும்பு  விமானப்படை தள  கட்டளை அதிகாரி எயார் வைஸ் மார்ஷல் அமரசிங்க அவர்கள்  வரவேற்றார்.

முன்பள்ளி  மாணவர்களுக்கும்  பகல் நேர பராமரிப்பு நிலையம் ஆகியவற்றில் போதிய இடவசதிகள் பற்றாக்குறை காரணமாக அதற்குரிய தீர்வினை வழங்கும் பொருட்டு இந்த புதிய கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டதுசேவா வனிதாபிரிவின் வழிகாட்டலின்கீழ் கட்டுநாயக்க சிவில்  பொறியியல் பிரிவினால் கட்டிடவேலைகள் இடம்பெற்றது மேலும்  பொதுப்பொறியியல் பணிப்பாளரின் மேற்பார்வையில் இடம்பெற்றது.

புதிதாக நிர்மாணிக்கப்பட்ட  விமானப்படை சாரணர் கட்டிடத்தொகுதியை திறந்துவைக்க சென்ற விமானப்படை தளபதியை  விமானப்படை சாரணர் பிரிவின் தலைவர்  குரூப் கேப்டன் பாமிந்த ஜயவர்தன மற்றும்

துணைத்தலைவர்  குரூப் கேப்டன் சுஜீவ பொன்னம்பெரும  வான் சாரணர் பிரிவின்  செயலாளர் விங் கமாண்டர் ரஜீவ் பாகோட  ஆகியோர் வரவேற்றனர்  இதன்போது  இந்த நிகழ்வில் மூத்த சாரணர்கள் மற்றும் முதுகலை

சாரணர்கள்  சிரேஸ்ட மற்றும் கனிஷ்ட சாரணர்கள் கலந்துகொண்டனர்  மேலும் உலக சாரணர் இயக்கத்தின் நிறுவனர் மறைந்த லெப்டினன்ட் ஜெனரல் பேடன் பவலுக்கு விமானப்படை தளபதி அஞ்சலி செலுத்தினார் அதன்பின்பு அதிகார பூர்வமாக கட்டிடத்தை திறந்துவைத்தார்

இந்த நிகழ்வில்  விமானப்படை பணிப்பாளர்கள் மற்றும் அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்  



airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை