இலங்கை விமானப்படையினால் வெப்ப ஈரத்தன்மை மூலம் ஒட்சிசன் வழங்கும் சிகிச்சை பிரிவுகள்
இலங்கை விமானப்படையினால் நிர்மாணிக்கப்பட்ட  வெப்ப ஈரத்தன்மை மூலம் ஒட்சிசன் வழங்கும் சிகிச்சை பிரிவுகள்  கடந்த 2021 மே 12ம்  திகதி  ஜனாதிபதி காரியாலயத்தில் அதிமேதகு ஜனாதிபதி அவர்களிடம் கையளிக்கப்பட்டது

இந்த நிகழ்வின்போது  சுகாதார அமைச்சர் கௌரவ பவித்ரா வன்னியாராச்சி மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் ( ஓய்வுபெற்ற ) கமால் குணரத்ன மற்றும் சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்தியர்  மேஜர் ஜெனரல் ( ஓய்வுபெற்ற) சஞ்சீவ முனசிங்க அவர்கள் மற்றும் விமானப்படை தளபதி எயார் ம்,மார்ஷல் சுதர்சன மற்றும் விமானப்படை பொதுப்பொறியியல் பணிப்பளார் எயார் வைஸ் மார்ஷல் ரத்நாயக்க , விமானப்படை பொதுப்பொறியியல் பிரிவின் கட்டளை அதிகாரி குரூப் கேப்டன்  பிரசங்க மார்டினோ மற்றும் வடிவமைப்பு குழு விசேட வைத்திய நிபுணர் திலங்க ரத்னபால மற்றும் திட்டமிடல் பொறியியல் பிரிவு அதிகாரி  ஸ்கொற்றன் ளீடர் புஷ்பகுமார ஆகியோர் கலந்துகொண்டனர்

ஜனாதிபதி  அவர்களின் ஆலோசனைப்படி கொவிட் -19 தொற்றின் காரணமாக ஒட்சிசன் பற்றாக்குறையை  நிவர்த்திசெய்யும் நோக்கில் விமானப்படை  குழுவினாரால் இந்த கருவிகள் நிர்மாணிக்கப்பட்டது

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை