இலங்கை விமானப்படையின் 55வது " குவான்மீதுதகம் '' வான் நட்பு திட்டம் கம்பஹாவில் இடம்பெற்றது
1:38pm on Tuesday 30th May 2023
விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி  திருமதி சார்மினி பத்திரன  அவர்களின் வழிகாட்டலின்கீழ் கட்டுநாயக்க    விமானப்படை தளத்தினால் இலங்கை விமானப்படையின் 55வது " குவான்மீதுதகம் '' வான் நட்பு திட்டம்கம்பஹா மாவட்டத்தில் உள்ள ஆர்க்லோ அனாதை இல்லத்தில்  கடந்த 2023 மே 26ம் திகதி   வெற்றிகரமாக நிறைவு பெற்றது.

ஆர்க்லோ குழந்தைகள் இல்லத்தில் பல்வேறு வயதுடைய சுமார் 26 குழந்தைகள் தங்கியுள்ளனர். அனாதை இல்லத்தின் மேற்கூரையை சீர் செய்தல், கட்டிடத்திற்கு பெயின்ட் அடித்தல், சிமென்ட் தளத்தை புதுப்பித்தல், வகுப்பறை நாற்காலிகள் மற்றும் மேஜைகள் அமைத்தல், கதவுகளை சரி செய்தல், முறையான நீர் மற்றும் மின்சார இணைப்புகளை கண்காணித்தல் மற்றும் புதிய மின்விசிறிகள் பொருத்துதல் போன்ற பணிகள் இடம்பெற்று . கட்டுநாயக்க விமானப்படை தளத்தின் பதில்  கட்டளை அதிகாரி எயார் கொமடோர் சமன் உடுகும்புரவினால்  கையளிக்கப்பட்டது. இந்த திட்டத்திற்கு விமானப்படை சேவை வனிதா பிரிவு மற்றும் விமானப்படை தளம் கட்டுநாயக்க நிதியளித்தது.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை